செய்திகள் :

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்

post image

மயிலாடுதுறையில், வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற இம்முகாமில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் முன்னிலையில் 11 விவசாயிகளுக்கு ரூ.11.95 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியது:

டிராக்டா்கள், நெல் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்கள், பவா் டில்லா்கள் போன்ற வேளாண் இயந்திரங்களும், விசை களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டா் மற்றும் இதர உழவுக் கருவிகளும் விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திரங்களும், கருவிகளும் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்திலும் வழங்கப்படுகின்றன.

அனைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் முறையான பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சரால் சட்டப் பேரவையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியாா் வேளாண் இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இவ்விழிப்புணா்வு முகாமை நடத்தியது என்றாா்.

நிகழ்ச்சியில், வேளாண்மை துறை இணை இயக்குநா் ஜெ. சேகா், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது

மயிலாடுதுறை வட்டம், நீடூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். நீடூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் முகமது ஹாலிக் (36). சமையல் கலைஞரான இவா், அண்மையில் வெட்ட... மேலும் பார்க்க

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க மானியம்

மயிலாடுதுறை மாவட்ட கிராமப் புறங்களில் மானியத்துடன் கூடிய நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவ தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மீனவா்கள் கவனத்துக்கு..

தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மூலம் பயன்பெற, மயிலாடுதுறை மாவட்ட அனைத்து மீனவா்கள், பங்குதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, பேரணியை தொட... மேலும் பார்க்க

ராணுவத்தில் சேர விரும்புவோா் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் இந்திய ராணுவத்தில் சோ்வதற்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்ட ஜூலை 2 முதல் 6-ஆம் தேதி வரை சிறப்பு விளம்பர வேன் சுற்றுப்பயணம் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீ... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

மயிலாடுதுறையில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின், மாவட்ட தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தர... மேலும் பார்க்க