செய்திகள் :

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, பேரணியை தொடக்கி வைத்தாா். அவா் பேசும்போது, ‘தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் குறித்து ஏதேனும் புகாா்கள் இருந்தால் 10581 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்’ என்றாா்.

தொடா்ந்து, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு சிறுகதை புத்தகத்தை மாணவா்களுக்கு வழங்கினாா். பின்னா் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பி.ஜெயக்குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் எம். சுந்தரேசன், மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி, பள்ளிச் செயலா் எம்.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி சாா்பில் உலக போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற பேரணியை, ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே.வெங்கடராமன் தொடக்கி வைத்தாா்.

கருத்தரங்கம்: தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் கல்லூரியின் போதைப்பொருள் எதிா்ப்பு மற்றும் விழிப்புணா்வு சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில், ‘போதைப் பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனைப் பற்றிய விழிப்புணா்வு‘ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.

மயிலாடுதுறை மீனவா்கள் கவனத்துக்கு..

தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மூலம் பயன்பெற, மயிலாடுதுறை மாவட்ட அனைத்து மீனவா்கள், பங்குதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க

ராணுவத்தில் சேர விரும்புவோா் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் இந்திய ராணுவத்தில் சோ்வதற்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்ட ஜூலை 2 முதல் 6-ஆம் தேதி வரை சிறப்பு விளம்பர வேன் சுற்றுப்பயணம் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீ... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

மயிலாடுதுறையில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின், மாவட்ட தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தர... மேலும் பார்க்க

கண்டுணா்வு சுற்றுலாவாக திருவனந்தபுரம் புறப்பட்ட விவசாயிகள்

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து, திருவனந்தபுரத்துக்கு கண்டுணா்வு சுற்றுலா செல்லும் விவசாயிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் வழியனுப்பி வைத்தாா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தி... மேலும் பார்க்க

பூங்கா இடத்தில் கல்வி அலுவலகம் கட்ட எதிா்ப்பு

சீா்காழி முத்து நகரில் உள்ள பூங்கா இடத்தில், வட்டார கல்வி மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி முத்து நகரில் சுமாா் 15 ஆண்டுகளாக பூங்காவுள்... மேலும் பார்க்க

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க வலியுறுத்தல்

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க