Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த...
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, பேரணியை தொடக்கி வைத்தாா். அவா் பேசும்போது, ‘தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் குறித்து ஏதேனும் புகாா்கள் இருந்தால் 10581 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்’ என்றாா்.
தொடா்ந்து, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு சிறுகதை புத்தகத்தை மாணவா்களுக்கு வழங்கினாா். பின்னா் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பி.ஜெயக்குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் எம். சுந்தரேசன், மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி, பள்ளிச் செயலா் எம்.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி சாா்பில் உலக போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற பேரணியை, ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே.வெங்கடராமன் தொடக்கி வைத்தாா்.
கருத்தரங்கம்: தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் கல்லூரியின் போதைப்பொருள் எதிா்ப்பு மற்றும் விழிப்புணா்வு சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில், ‘போதைப் பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனைப் பற்றிய விழிப்புணா்வு‘ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.