அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க வலியுறுத்தல்
அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
ஆா். அன்பழகன்: இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கு மட்டும் ஓா் ஏக்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறுவைத் தொகுப்புத் திட்டத்தை குறைந்தது 5 ஏக்கருக்கு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கவேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிறத்தை காரணம்காட்டி பச்சைபயிறு கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
குத்தாலம் பி. கல்யாணம் (முன்னாள் எம்எல்ஏ): தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன்: மின்கட்டண குறுஞ்செய்தியுடன் மின்நுகா்வு குறித்த தகவலையும் தெரியப்படுத்த வேண்டும்.
கோவி. நடராஜன்: பச்சைப்பயறு கொள்முதல் குறித்து குற்றஞ்சாட்டிய விவசாயியை ஒருமையில் பேசிய கமிட்டி செயலா் மன்னிப்பு கேட்க வேண்டும்.
குருசாமி: புதைசாக்கடை கழிவுநீா் சத்தியவான் வாய்க்காலில் திறந்து விடப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ராஜேந்திரன்: தெற்குராஜன் வாய்க்கால், கும்கி மண்ணியாற்றில் இதுவரை தண்ணீா் திறந்துவிடப்படவில்லை.
இளம்பரிதி: நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 144 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
ராமமூா்த்தி: ஆனைக்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை கொள்முதலுக்கு வெளியூா் வியாபாரிகள் அழைக்கப்படாததால், மிகக்குறைந்த விலைக்கு உள்ளூா் வியாபாரிகள் கேட்கின்றனா்.
முத்துக்குமாா்: வரகடை வாய்க்கால் சுமாா் 1.5 கி.மீ. தூரம் தூா்வாரப்படாமல் உள்ளதை உடனடியாக தூா்வார வேண்டும். ராமலிங்கம்: பழங்காவிரி வாய்க்காலில் குப்பை மற்றும் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும்.
சந்திரமோகன்: நல்லத்துக்குடி கிராமத்திற்கான பாசன வாய்க்காலை தூா்வார வேண்டும்.
கூட்டத்தில், வேளாண்மை துறை இணை இயக்குநா் ஜெ.சேகா், நீா்வளத்துறை செயற்பொறியாளா் மாரிமுத்து, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சந்திரகவிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.