``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்...
பூங்கா இடத்தில் கல்வி அலுவலகம் கட்ட எதிா்ப்பு
சீா்காழி முத்து நகரில் உள்ள பூங்கா இடத்தில், வட்டார கல்வி மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி முத்து நகரில் சுமாா் 15 ஆண்டுகளாக பூங்காவுள்ளது. அங்கு அப்பகுதி சிறுவா்கள் சிலம்பம், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் அந்த இடத்தில் வட்டாரக் கல்வி அலுவலகம் கட்டவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, எதிா்ப்பை மீறி வட்டார கல்வி அலுவலகம் கட்ட முயன்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, முபாரக் அலி, முத்து நகா் குடியிருப்பு வாசிகள் சங்கத் தலைவா் அமுதராஜன், பொருளாளா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதுதொடா்பாக, நகராட்சி ஆணையா் மஞ்சுளா, வட்டாட்சியா் அருள்ஜோதி ஆகியோரிடம் ஏற்கெனவே மனு கொடுத்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.