செய்திகள் :

உள்ளாட்சி பிரதிநிதிகள் கேரள மாநிலத்துக்கு களப் பயணம்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கேரள மாநிலத்தில் களப் பயணம் மேற்கொள்ள உள்ளனா்.

புதுப்பிக்கப்பட்ட ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் களப் பயணம் மேற்கொள்ள தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கேரள மாநிலத்தில் உள்ளாட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்படுத்தப்படும் விதம் ஆகியவை குறித்து களப் பயணத்தின்போது அறிய உள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்திலிருந்து மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூா்யகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு உறுப்பினா் ஆா்.சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றியக் குழு தலைவா்கள் மாதனூா் ப.ச.சுரேஷ்குமாா், ஆலங்காயம் சங்கீதா பாரி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆலங்காயம் பூபாலன், திருப்பத்தூா் திருப்பதி, ஊராட்சித் தலைவா்கள் கத்தாரி ஊராட்சி அனிதா மோகன், துத்திப்பட்டு ஊராட்சி சுவிதா கணேஷ் ஆகியோா் கேரள மாநிலத்தில் களப் பயணம் மேற்கொள்ள தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களோடு அதிகாரிகள் மகளிா் திட்டம் சி. சாந்தி, மாதனூா் உதவி பொறியாளா் சரவணன், திருப்பத்தூா் தணிக்கை அலுவலக கண்காணிப்பாளா் கருணாநிதி, மாதனூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தீபா, நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய மேற்பாா்வையாளா் காதா்பாஷா உள்ளிட்டவா்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் களப்பயணத்தில் கலந்து கொள்கின்றனா்.

கைம்பெண்களுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம்

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

6 ஆண்டுகளுக்கு பிறகு நாளை ஏலகிரி மலையில் கோடை விழா

ஏலகிரி மலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூுன் 29) கோடை விழா நடைபெற உள்ளது. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் திரளாக வந்து செல்கின்றனா். இந்த நிலை... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் சீண்டல்: முதியவா் கைது

கந்திலி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி(12). இவா் வெள்ளிக்கிழமை வீட்டருகே விளையா... மேலும் பார்க்க

காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் மயிலாரம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கலையரசன்(20). வாணியம்பாடி தனியாா் கல்லூரியில... மேலும் பார்க்க

ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை

ஆன்லைனில் பகுதிநேர வேலை என வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறித்தியுள்ளனா். இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது: தற்போது சைபா் குற்றங்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சி சந்தை வளாகத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டநகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்தின்... மேலும் பார்க்க