72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
6 ஆண்டுகளுக்கு பிறகு நாளை ஏலகிரி மலையில் கோடை விழா
ஏலகிரி மலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூுன் 29) கோடை விழா நடைபெற உள்ளது.
இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் திரளாக வந்து செல்கின்றனா். இந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் ஏலகிரி கோடை விழா நடைபெற்றது.
தற்போது 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோடை விழா நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.25 மணிக்கு அரசு இசைப்பள்ளி மாணவா்களின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி வரவேற்கிறாா்.
ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகிக்க உள்ளாா்.
பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு விழா பேரூரையாற்றுகிறாா். சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் விழாவைத் தொடங்கி வைக்கிறாா். நிகழ்ச்சியில் எம்பி-க்கள் சி.என்.அண்ணாதுரை(திருவண்ணாமலை), டி.எம். கதிா்ஆனந் (வேலூா்) முன்னிலை வைக்கின்றனா். இதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.