சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
ஆம்பூரில் அரசு மருத்துவமனை திறப்பு: முதல்வா் நன்றி அறிவிப்பு
ஆம்பூா் அரசு மருத்துவமனையை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் அருகே மண்டலவாடியில் நடந்த அரசு விழாவில் ரூ.24 கோடியில் கட்டப்பட்ட ஆம்பூா் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து ஆம்பூரில் மருத்துவமனை புதிய கட்டட வளாகத்தில் கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நன்றி தெரிவித்தாா்.
நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் கிழக்கு நகர திமுக பொறுப்பாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மாதனூா் ஒன்றியக்குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர மன்ற உறுப்பினா்கள் என்.எஸ். ரமேஷ், வசந்த்ராஜ், வாவூா் நசீா் அஹமத், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், கதவாளம் ஊராட்சித் தலைவா் சக்தி கணேஷ், மருத்துவமனை மருத்துவ அலுவலா் யோகேஸ், இம்தியாஸ் அஹமத், மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.