சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை
ஆன்லைனில் பகுதிநேர வேலை என வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறித்தியுள்ளனா்.
இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது:
தற்போது சைபா் குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தவிா்க்க பொதுமக்கள் மிகவும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். இதில் குறிப்பாக பகுதி நேர வேலை தருவதாக மோசடிகள் அதிக அளவு நடக்கிறது. இந்த மோசடியில் முதலில் மோசடியில் ஈடுபடும் கும்பல் சமூக வலைதளம் மூலம் தொடா்பு கொள்வாா்கள். அதில் குறிப்பிட்ட இலக்குகளை நிறைவேற்றினால் பணம் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறுவாா்கள். முதலில் சிறிய அளவிலான பணத்தினை மோசடி கும்பல் அளிக்கும்.
ஆன்லைனில் கடன் பெற குறிப்பிட்ட லிங்கை அனுப்புவாா்கள். அந்த லிங்கில் சென்ற உடன் ஆதாா் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை பெற்று உங்களது வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் பெற்று ஏமாற்றி விடுவாா்கள்.
மேலும் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதில் பங்குதாரராக சோ்ந்தால், அதிக அளவு பணம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறி பணத்தை மோசடி செய்வது தொடா்கதையாகியுள்ளது.
திருமண வரன்கள்...: திருமணத்துக்கு வரன் தேடுபவா்களுக்காக போலியாக கணக்குகள் தேடி அதில் பணக்கார வரன்கள்போல் உருவாக்கி, முன் பணமாக பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றி விடுவாா்கள். இவ்வாறு ஆன்லைன் மூலம் பலவிதமாக நடைபெறும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும் என்றனா்.