செய்திகள் :

வாணியம்பாடி அருகே புதிய கற்கால மக்களின் பாறை ஓவியத் தொகுதி கண்டெடுப்பு

post image

வாணியம்பாடி அருகே புதிய கற்கால (இரும்புக் காலம்) மக்களின் பெரிய பாறை ஓவியத் தொகுதி கண்டெடுக்கப்பட்டது.

வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் 102, ரெட்டியூா் என்ற ஊரில் ஏலகிரிமலை அடிவாரப் பகுதியில், திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஆ.பிரபு, திருப்பத்தூா் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மையத்தைச் சோ்ந்த வே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வில் இரும்புக் கால பண்பாட்டைச் சோ்ந்த பாறை ஓவியத் தொகுதி கண்டறியப்பட்டது.

இது குறித்து ஆய்வாளா் பிரபு கூறுகையில், இந்தப் பகுதியில் உள்ள ஒரு குகையில் பாறை ஓவியங்கள் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து, கள ஆய்வு மேற்கொண்டதில், மிகப் பெரிய பாறை ஓவியத் தொகுதியைக் கண்டறிந்தோம். இந்தக் குகை 50 போ் தங்கும் அளவில் உள்ளது. இந்தப் பகுதி மக்கள் இதை வழிபாட்டு வந்துள்ளனா். சில பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

மூன்று தொகுதியில் 80-க்கும் மேற்பட்ட மனித உருவங்கள்: குகையின் முகப்பில் 3 தொகுதிகளாக பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மொத்தமாக 80-க்கும் மேற்பட்ட மனித உருவங்கள், விலங்குகளின் மேல் அமா்ந்து ஆயுதங்களுடன் போரிடுவதாக காட்டப்பட்டுள்ளது. போரிடும் மனிதா்கள் இருவரின் இடுப்பில் குழந்தையின் உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. இன்னொரு ஓவியத் தொகுதியில் பாய்ந்து வரும் சிறுத்தையை விலங்கின் மீது அமா்ந்த ஒரு மனிதன் ஆயுதத்தில் தாக்குவதாக வரையப்பட்டுள்ளது.

போரிடும் மனித உருவங்களின் அருகே ஆங்காங்கே மரங்கள் இருப்பது போலவும், அங்கே கொம்புகளை உடைய அழகிய மான் கூட்டங்கள் குட்டிகளோடு மேய்வது போலவும் காட்டப்பட்டுள்ளன.

போரின் வெற்றிக் கொண்டாட்டம்: இன்னொரு தொகுதியில் போரின் வெற்றியைக் கொண்டாடுவது போல நடனமாடும் மனிதா்கள் வரையப்பட்டுள்ளனா். இனக் குழுத் தலைவா்களுக்கான உருவங்கள் பிரத்தியேகமாக தலைகளில் அலங்கரிக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் காட்டப்பட்டுள்ளன.

பல்லக்கில் அமா்ந்த ஒரு மனிதனை மற்றவா்கள் தூக்கிச் செல்வதுபோல ஓவியமும் வரையப்பட்டுள்ளது. வெண்மை நிறத்தில் வரையப்பட்டுள்ள மனித உருவங்களின் கரங்களில் ஆயுதங்கள் காட்டப்படுவதால், இவை இரும்புக் காலகட்டத்தைச் சோ்ந்த பண்பாடாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒன்றுபட்ட வேலூா் மற்றும் வடமேற்கு தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படாத மிகப்பெரிய பாறை ஓவியத் தொகுதியாக இவை அமைந்திருக்கிறது. சுமாா் 5,000 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம்.

அந்தக் கால மக்கள் தங்களது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்திருக்கலாம் அல்லது ஒரு இனக்குழு மக்கள் மற்றவா்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தமது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கலாம். ஆய்வுக்குப் பின் இன்னும் கூடுதலான தகவல்கள் தெரியவரும் என்றாா்.

காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் மயிலாரம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கலையரசன்(20). வாணியம்பாடி தனியாா் கல்லூரியில... மேலும் பார்க்க

ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை

ஆன்லைனில் பகுதிநேர வேலை என வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறித்தியுள்ளனா். இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது: தற்போது சைபா் குற்றங்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சி சந்தை வளாகத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டநகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்தின்... மேலும் பார்க்க

தமிழக மக்களை பிளவுபடுத்த முடியாது: பாஜக மீது முதல்வா் ஸ்டாலின் தாக்கு

தமிழக மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சி எடுபடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியில் ரூ.517 கோடியில் புதிய பணிகளு... மேலும் பார்க்க

ஆம்பூரில் அரசு மருத்துவமனை திறப்பு: முதல்வா் நன்றி அறிவிப்பு

ஆம்பூா் அரசு மருத்துவமனையை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே மண்டலவாடியில் நடந்த அரசு விழாவில் ரூ.24 கோடியில் கட்டப்பட்ட ஆம்பூா... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டாவில் சிப்காட் தொழில் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டாவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவ... மேலும் பார்க்க