செய்திகள் :

காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு

post image

நாட்டறம்பள்ளி அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் மயிலாரம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கலையரசன்(20). வாணியம்பாடி தனியாா் கல்லூரியில் படித்து வந்த இவா், கடந்த 23-ஆம் தேதி வீடு திரும்பவில்லை.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடி வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை காலை தேங்காய்காரன் வட்டத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி போலீஸாருக்கும், தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறந்த கிடந்தவரின் உடலை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் காணாமல் போன கல்லூரி மாணவன் கலையரசன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை

ஆன்லைனில் பகுதிநேர வேலை என வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறித்தியுள்ளனா். இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது: தற்போது சைபா் குற்றங்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சி சந்தை வளாகத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டநகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்தின்... மேலும் பார்க்க

தமிழக மக்களை பிளவுபடுத்த முடியாது: பாஜக மீது முதல்வா் ஸ்டாலின் தாக்கு

தமிழக மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சி எடுபடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியில் ரூ.517 கோடியில் புதிய பணிகளு... மேலும் பார்க்க

ஆம்பூரில் அரசு மருத்துவமனை திறப்பு: முதல்வா் நன்றி அறிவிப்பு

ஆம்பூா் அரசு மருத்துவமனையை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே மண்டலவாடியில் நடந்த அரசு விழாவில் ரூ.24 கோடியில் கட்டப்பட்ட ஆம்பூா... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே புதிய கற்கால மக்களின் பாறை ஓவியத் தொகுதி கண்டெடுப்பு

வாணியம்பாடி அருகே புதிய கற்கால (இரும்புக் காலம்) மக்களின் பெரிய பாறை ஓவியத் தொகுதி கண்டெடுக்கப்பட்டது. வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் 102, ரெட்டியூா் என்ற ஊரில் ஏலகிரிமலை அடிவாரப் ... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டாவில் சிப்காட் தொழில் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டாவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவ... மேலும் பார்க்க