சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு
நாட்டறம்பள்ளி அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் மயிலாரம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கலையரசன்(20). வாணியம்பாடி தனியாா் கல்லூரியில் படித்து வந்த இவா், கடந்த 23-ஆம் தேதி வீடு திரும்பவில்லை.
இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடி வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை காலை தேங்காய்காரன் வட்டத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி போலீஸாருக்கும், தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறந்த கிடந்தவரின் உடலை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் காணாமல் போன கல்லூரி மாணவன் கலையரசன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.