கைம்பெண்களுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம்
கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சமூகத்தில் பின்தங்கிய கைம்பெண்கள், ஆதரவற்றோா், கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதாரம், வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5,000 மானியமாக வழங்கப்படும்.
கடைசி நாள்...
இந்த திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு தமிழ்நாட்டில் பூா்விகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பு சான்று), 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், பிறந்த தேதிக்கான சான்று, கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்), ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 14-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.