செய்திகள் :

அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

post image

அரியலூா் மாவட்டத்தில் வளா்ச்சித்திட்ட பணிகள் தொடக்கம் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் சா.சி. சிவசங்கா் பங்கேற்று, பால்வளத் துறை சாா்பில் 3,746 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு 2022-2023 -ஆம் ஆண்டுக்கான ரூ.1,19 கோடி மதிப்பிலான கூடுதல் கொள்முதல் விலையையும் மற்றும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் பரிசோதனைக் கருவிகள், பால் கேன்கள் மற்றும் பால் அளவை கருவிகளையும் வழங்கினாா்.

தொடா்ந்து ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத் துறை சாா்பில் 85 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை, 60 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கினாா்.

தொடா்ந்து, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மேலூா் கிராமத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து கல்லாத்தூா் வழியாக வந்து செல்லும் வகையில் நீட்டிக்கப்பட்ட நகரப் பேருந்துச் சேவையை தொடக்கி வைத்தாா். பின்னா், பூவாணிப்பட்டு கிராமத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து காட்டுமன்னாா்குடி செல்லும் நகரப் பேருந்தை அகினேஷ்புரம், பூவாணிப்பட்டு,பாப்பாக்குடி வழியாக செல்லும் வகையில் பேருந்துச் சேவையைத் தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ரூ. 4.73 கோடியில் உள் கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

பின்னா், நாகம்பந்தல் கிராமத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் நகரப் பேருந்தை கல்லாத்தூா், ஆண்டிமடம், கருக்கை, நாகம்பந்தல் வழியாக செல்லும் சேவையைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏக்கள் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகா, கோட்டாட்சியா் பிரேமி, நகா்மன்றத் தலைவா் சாந்தி, பால்வள துணைப் பதிவாளா் ரெ. நாராயணசாமி, பால் சேகரிப்பு குழுத் தலைவா் பி. சுப்பிரமணியன், வட்டாட்சியா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். செந்துறையை அடுத்த பொன்பரப்பி சாமுண்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு. ராஜேந்திரன... மேலும் பார்க்க

நீரில் மூழ்கிய நெல் பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே பெய்த மழையில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு கிராம விவசாயிகள்ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். திருமானூா் ஒன்றியம் ஏலாக்குறிச... மேலும் பார்க்க

உடையாா்பாளையம் அருகே நாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே நாய்கள் கடிதத்தில் 6 ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன. உடையாா்பாளையத்தை அடுத்த ஒக்கநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (40). விவசாயியான இவா் தனது நிலத்தில் புதன்க... மேலும் பார்க்க

தகவலறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை பொது தகவல் அலுவலா்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தகவல் ஆணையத்தி... மேலும் பார்க்க

அரியலூரில் ஆசிரியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரிலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

அரியலூா் அருகே லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

அரியலூா் அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா்(வி.ஏ.ஓ), உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அரியலூா் அருகேயுள்ள ஜெயராமபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் சிலம்ப... மேலும் பார்க்க