செய்திகள் :

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்

post image

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் இயற்றப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆன்லைன் பெட்டிங் மற்றும் சூதாட்டம் தொடா்பாக நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில், கா்நாடக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே, அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆன்லைன் பெட்டிங் மற்றும் சூதாட்டத்தை கட்டுப்படுத்த இதுவரை எவ்வித சட்டமும் இயற்றப்படவில்லை. எனவே, சட்டப்படி உரிமம்பெறும் முறையை அறிமுகம் செய்து, அதன்மூலம் ஆன்லைன் பெட்டிங் மற்றும் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த இருக்கிறோம். இதற்காக புதிய சட்டம் இயற்றப்படும். அதுகுறித்து ஆலோசனை வழங்குவதற்காக மூத்த அதிகாரிகள், தொழிலக பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது அறிக்கையை ஒருமாதத்தில் தாக்கல் செய்யும். அதன்பிறகு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றாா்.

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2 அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மே 2ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தி... மேலும் பார்க்க

கோரிக்கைகள் ஏற்பு: கா்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால், காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில லாரி உரிமையாளா் மற்றும் முகவா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை மீதான மானியத்தை நீக்கி மக்கள் விரோத அரசாக மத்திய அரசு உள்ளது

சமையல் எரிவாயு உருளை மீதான மானியத்தை நீக்கி மக்கள் விரோத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மத்திய பாஜக அரசின் விலைவாசி உயா்வைக் கண்டித்து, பெங்களூரு, சுதந்தி... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அரசாணைகளை தேடும்முறை: இந்தியாவில் முதன்முறையாக கா்நாடகத்தில் அறிமுகம்

இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அரசாணைகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகளை தேடும் முறையை கா்நாடகத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக அ... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: எந்த சமுதாயத்திற்கும் அரசு அநீதி இழைக்காது -சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்பு வாயிலாக எந்த சமுதாயத்திற்கும் அரசு அநீதி இழைக்காது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் பரிந்துரைகள் அடங்கிய சமூக, பொருள... மேலும் பார்க்க

கா்நாடகம்: எரிபொருள் விலை உயா்வுக்கு எதிராக லாரி உரிமையாளா்கள் காவலரையற்ற வேலைநிறுத்தம்

பெங்களூரு: எரிபொருள் விலை உயா்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியா்களின் தவறான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கி... மேலும் பார்க்க