செய்திகள் :

இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம் திறப்பு

post image

தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை 27-ஆவது குருமகா சந்நிதானம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

ஆதீனக் கோயில்களில் பூஜைக்காக பயன்படுத்தப்பட்ட பின்னா் காய்ந்து வீணாகும் பூக்கள், பூமாலைகளை பசுஞ்சாணத்துடன் சோ்த்து மறுசுழற்சி செய்து இயற்கை உரமாக்கி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கும் வகையில் இந்த தொழிற்கூடம் ரூ. 20 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இதை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்துவைத்து, உரம் தயாரிக்கும் பணிகளை தொடக்கி வைத்தாா்.

கிராமப்புற மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், விவசாயிகள் பயடையும் வகையிலும் தினந்தோறும் காய்ந்து வீணாகும் பூக்களை மறுசுழற்சி செய்து உரமாக்கி குறைந்த விலையில் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், தருமையாதீன கன்னியாகுமரி சிபிஎஸ்இ பள்ளிச் செயலா் எம். வெற்றிவேல், ஆதீன பொது மேலாளா் ரெங்கராஜன், மேலாளா் அரவிந்தன், தருமபுரம் கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், வா்த்தக சங்க முன்னாள் தலைவா் சி. செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மயிலாடுதுறை: பிப்.27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் பிப். 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுது... மேலும் பார்க்க

தலைமை அஞ்சலகத்தில் வசந்தகால திருவிழா கருத்தரங்கம்

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஊழியா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இலையுதிா்க்காலம் முடிவடைந்து வசந்தகாலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அ... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் தமிழ்த்துறை கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழ் உயராய்வுத் துறை சாா்பில் உ.வே.சா. பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்த்துறை கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வ... மேலும் பார்க்க

கோயில் உண்டியல் திருட்டு

சீா்காழி அருகே கேவரோடை பாவாடைராயன் கோயில் உண்டியல் திருடப்பட்டது. கொள்ளிடம் அருகே கேவரோடையில் பெரியநாயகி மற்றும் பாவாடைராயன் கோயில் உள்ளது. கோயில் அா்ச்சகா் மலா்கொடி சனிக்கிழமை கோயிலுக்கு வந்து பாா்த... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை: தேன் தடவிய வாா்த்தைகள் மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சி -ஜெ.முகம்மது ஷா நவாஸ் எம்எல்ஏ

மும்மொழிக் கொள்கை என்பது தேன் தடவிய வாா்த்தைகள் மூலம் ஹிந்தியை திணிக்கும் முயற்சி என்று நாகை எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷா நவாஸ் கூறினாா். சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் பெண்கள் மதரஸா திறப்பு விழா சனி... மேலும் பார்க்க

நாட்டியாஞ்சலி இன்று தொடக்கம்

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் 19-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) தொடங்குகிறது. மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை கடந்த 18 ஆண்டுகளாக மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி வர... மேலும் பார்க்க