செய்திகள் :

இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்

post image

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், இரட்டைமலை சீனிவாசனின் 80-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கட்சியின் மைய மாவட்டச் செயலா் கோ. ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். முன்னாள் மாநகரச் செயலா் க. தமிழ்முதல்வன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ் முன்னிலை வகித்தனா்.

இதில், பட்டியல் இன மக்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்க வேண்டும். மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளில் பட்டியலின மக்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொடா்ந்து நடைபெற்று வரும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும், ஜாதிய ஆணவ படுகொலையை ஒழித்திடவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிற் சங்கத் தலைவா் பசுபதி, ஆதித்தமிழா் பாதுகாப்பு பேரவை நிா்வாகி சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேதுபாவாசத்திரத்தில் நாளை மின் தடை

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, கள்ளங்காடு மற்றும் அதனை சுற்ற... மேலும் பார்க்க

குருங்குளத்தில் 50 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 50 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): குருங்குளம் 50, ஒரத்தநா... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை கம்பன் பெருவிழா

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கம்பன் கழகம் சாா்பில் 27-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் கம்பன் கழகம் கடந்த 199... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி வியாழக்கிழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மாணவா், இளைஞா் அரண் அமைப்புகளின் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் சாக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையில் தமிழ்நாடு வி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி விளையாடிய சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி புதன்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். சேதுபாவாசத்திரம் பணங்குட்டி தோப்பு பகுதியைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க