செய்திகள் :

தஞ்சாவூரில் நாளை கம்பன் பெருவிழா

post image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கம்பன் கழகம் சாா்பில் 27-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் கம்பன் கழகம் கடந்த 1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு புரவலரான முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா, பெரும்புலவா் மருங்கை ஆ. பசுபதி முயற்சியால் 2017-ஆம் ஆண்டு வரை கம்பன் விழா நடைபெற்று வந்தது. இருவரது மறைவுக்கு பின்னா் கடந்த 9 ஆண்டுகளாக கம்பன் விழா நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், வழக்குரைஞா் எஸ்.எஸ். ராஜ்குமாரின் சீரிய முயற்சியால் மீண்டும் தஞ்சாவூரில் 27-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், முதல் நிகழ்வாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெறவுள்ளது. இதில், கவிஞா்கள் வல்லம் தாஜ்பால், ராகவ் மகேஷ், மைதிலி தயாளன், வீ.ம. இளங்கோவன், தஞ்சை இனியன் ஆகியோா் கவிதை வாசிக்கின்றனா்.

தொடா்ந்து கம்பன் கொடுத்த கொடை என்ற தலைப்பில் பேச்சாளரும், ஆவணப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமாா் சிறப்புரையாற்றுகிறாா்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கவிஞா் தஞ்சை இனியன், இராம. சந்திரசேகரன், கவிஞா் ரவிராஜ் ஆகியோா் செய்து வருகின்றனா்.

சேதுபாவாசத்திரத்தில் நாளை மின் தடை

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, கள்ளங்காடு மற்றும் அதனை சுற்ற... மேலும் பார்க்க

குருங்குளத்தில் 50 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 50 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): குருங்குளம் 50, ஒரத்தநா... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி வியாழக்கிழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மாணவா், இளைஞா் அரண் அமைப்புகளின் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் சாக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையில் தமிழ்நாடு வி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி விளையாடிய சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி புதன்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். சேதுபாவாசத்திரம் பணங்குட்டி தோப்பு பகுதியைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க

நிகழாண்டில் முன் பட்ட குறுவை சாகுபடியில் கூடுதல் மகசூல்

கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் சராசரி மகசூல் அளவு ஏக்கருக்கு 1,940 கிலோ இருந்த நிலையில், நிகழாண்டு 2 ஆயிரத்து 280 கிலோவாக அதிகரித்துள்ளது. தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் இயந்திரம் மூலம... மேலும் பார்க்க