செய்திகள் :

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த படகையும் மீனவர்களையும் விடுக்கக் கோரிக்கை!

post image

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருடன் படகை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 403 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது கென்னடி என்பவரது படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

படகில் இருந்த மீனவர்கள் சங்கர், அர்ச்சுணன், முருகேசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து காங்கேசம் துறை கடற்டை துறைமுகற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கச்சத்தீவு திருவிழா முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற நிலையில், ஒரு விசைப்படகு மற்றும் மினவர்களை சிறைப்பிடித்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மீனவ சங்கத்தலைவர் சகாயம் கூறுகையில்:

ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யபடுவது, பல லட்சம் அபராதம் விதிப்பது மற்றும் கைது செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுவிக்க கோரி மீனவ சங்கத்தினர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மனு அளித்தோம்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் மீண்டும் 3 மீனவர்களுடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் படகுடன் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க | தங்கம் விலை ரூ.66,000! புதிய உச்சம்!

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்க... மேலும் பார்க்க

பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக்னிக் மினிஸ்டர்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட... மேலும் பார்க்க