செய்திகள் :

"இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டுமா?" - இஸ்ரேலியர்களின் மனநிலை குறித்த ஆய்வு சொல்வது என்ன?

post image

இதே நாள் 2023 அன்று இஸ்ரேல் - காஸா போர் தொடங்கியது. இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. சர்வதேச விதி மீறலில் தொடங்கி, ஐ.நா சபையை அவமானப்படுத்தியது, சர்வதேச நீதிமன்றத்தைப் புறக்கணித்தது, சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தைத் துச்சமென நடத்தியது என இஸ்ரேல் நடந்துகொண்ட விதங்கள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டன.

ஆனாலும், கடந்த ஆறு மாதங்களாகத்தான் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனங்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.

காசா
காசா

காசாவில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம், கல்விக்கூடங்களும், மருத்துவமனைகளும் குறிவைத்து தகர்க்கப்பட்டது, அகதிகள் முகாம் மீது தாக்குதல், சர்வதேச உதவிகளை காசாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்தது, 66,000-க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்தது உள்ளிட்ட பல காரணங்கள் இஸ்ரேல் மீது கண்டனம் வலுப்பெறுவதற்கு அடித்தளமிட்டன. இந்த நிலையில், இஸ்ரேலியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்திருக்கிறது இஸ்ரேல் ஜனநாயக நிறுவனம்.

இது தொடர்பாக அந்த நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில், ``காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டதாகப் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். பணயக்கைதிகள் ஆபத்தில் இருப்பதுதான் இந்தப் போர் முடிவடைய வேண்டும் என்பதற்கான முக்கிய காரணமாகக் கருதுகின்றனர்.

66 சதவிகித இஸ்ரேலியர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலைச் சுற்றியுள்ள தோல்விகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என 45 சதவிகிதப் பேரும், போர் நிறுத்தத்துக்குப் பிறகு பதவி விலக வேண்டும் என 19 சதவிகிதப் பேரும் தெரிவித்திருக்கின்றனர்.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

18 சதவிகிதம் பேர் இந்தப் போருக்கு நெதன்யாகுதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் ராஜினாமா செய்ய தேவையில்லை எனவும் கருதுகின்றனர். வெறும் 13 சதவிகிதம் பேர் மட்டுமே நெதன்யாகுவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

பெரும்பான்மையான மையவாதிகள் 63 சதவிகித பேரும், இடதுசாரி யூதர்கள் 88 சதவிகித பேரும் நெதன்யாகு இப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

கமல்: "அவரின் பேச்சு உங்களைப்போன்ற என்டர்டெய்னர்களுக்குப் புரியாது" - பாஜக அண்ணாமலைக்கு மநீம கண்டனம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விமர்சித்துப் பேசிய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பாளரும் மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ் க... மேலும் பார்க்க

பீகார் சட்டமன்றத் தேர்தல்: தொகுதி பங்கீட்டில் இழுபறி; முட்டி மோதும் கட்சிகள்; என்ன நடக்கிறது?

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து நிதீஷ் குமார் முதல்வராக இருப்பதால் இத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இ... மேலும் பார்க்க

அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை சேனல் முடக்கம்: வலுக்கும் கண்டனம்; ஆசிரியர் சமஸ் சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த 2016-ம் ஆண்டு முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முறையாக முதல்வர் அரியணையில் ஏறினார் இப்போதைய எதிர்... மேலும் பார்க்க

புதிய தலைமுறை: "கருத்துச் சுதந்திரம் என வாய்கிழியப் பேசிவிட்டு ஊடகங்கள் மீது ஆதிக்கம்" - சீமான்

தமிழில் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்றான `புதிய தலைமுறை' சேனல், அரசு கேபிளில் முடக்கம் செய்யப்பட்டிருப்பதாக சேனல் நிர்வாகம் குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறது.இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள்... மேலும் பார்க்க