செய்திகள் :

உணவு டெலிவரி போல இனி கார் டெலிவரி! விரைவில் அறிமுகம்

post image

இன்றைய நவீன காலத்தில் எதுவும் சாத்தியமே என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் விதமாக, வீட்டிலிருந்தவாறே உணவுப் பொருள்களை ஆர்டர் செய்து அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றி இனிமேல் புதிய கார் வாங்க விருப்பப்படுவோர்கூட, கார் ஷோரூம் செல்லாமல் ஆன்லைனில் புக்கிங் செய்தால் அதை வீட்டுக்கு கொண்டு வந்து டெலிவரி செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

இந்த புதிய வசதியை ஆன்லைன் வர்த்தக சேவை நிறுவனமான ‘ஸெப்டோ’ தொடங்கவுள்ளது. இதற்காக, முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்கோடா’வுடன் ஸெப்டோ கைகோர்த்துள்ளது.

இந்த வசதியை பயன்படுத்தி புதிய ஸ்கோடா காரை வாங்குவதற்கான விவரங்கள் அனைத்தையும் ஸெப்டோ ஆன்லைன் தளத்தில் பதிவு செய்துகொண்டால், வாடிக்கையாளர் புக்கிங் செய்த கார், குறைந்தபட்சமாக வெறும் 10 நிமிடங்களில் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படுமென்றும் சொல்லப்படுகிறது.

வரும் பிப். 8-ஆம் தேதி முதல் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுமென்று ஸ்கோடாவும் ஸெப்டோவும் தெரிவித்துள்ளன. அந்த வகையில், ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடலான ‘கைலாக்’ காரை இந்த வசதியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நடைமுறை எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது குறித்த சந்தேகம் இருந்தாலும், விரைவில் இந்த நடைமுறை குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை ரூ.17 லட்சம் கையாடல்: பெண் காவலர் பணி இடைநீக்கம்

பனாஜி : கோவா காவல் துறையில் தலைமைக் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடருந்து வசூலிக்கப்பட்ட ரூ.17 லட்சம் பணத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக பணியிலி... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி மாறுகிறதா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும் பார்க்க

இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!

இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்டவர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது அவர்கள் விரும்பினால் அரசின் பிற துறைகளில் பணி புரிய தேவஸ்தானம் தனத... மேலும் பார்க்க

அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுடன் அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று பகல் 2 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், தலைநகர் புது தில்லியில் இந்த விமானம் தரையிறங்காமல் அமிர்தசரஸ் தே... மேலும் பார்க்க

தில்லியில் வாக்குப்பதிவு நிறைவு!

தலைநகர் தில்லியில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.காலை மந்தமாக நடைபெற்றுவந்த வாக்குப் பதிவு, பிற்பகலில் அதிகரிக்கத் தொடங்கியதால், வாக்கு வி... மேலும் பார்க்க

பயனாளிகளின் உண்மைத் தன்மை: எண்ணெய் நிறுவனங்களுக்கு காலக்கெடு

எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு உருளை பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மையை பயோ-மெட்ரிக் முறையில் உறுதி செய்வதற்கான பணியை மார்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது.எண்ணெய் நிறுவனங்கள், எரி... மேலும் பார்க்க