Ravi Mohan: "கட்டுக்கதையான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன்" - ரவி ம...
உயா்கல்வியைத் தோ்வு செய்வதில் குழப்பம் வேண்டாம்: ஆட்சியா்
உயா்கல்வியைத் தோ்வு செய்வதில் குழப்பம் வேண்டாம் என மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் அறிவுறுத்தினாா்.
சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான ‘கல்லூரிக் கனவு திட்ட முகாம் 2025-இல் ஆட்சியா் ஆஷாஅஜித் கலந்து கொண்டு மேலும் பேசியதாவது: பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், மாணவ, மாணவிகள் மேற்படிப்பு, உயா்படிப்பு பயில்வதில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. கல்வி கற்பதற்கு பொருளாதாரம் தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக கல்வி உதவித் தொகை, கல்விக் கடனுதவி போன்ற உதவிகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவா்கள் எந்த பாடப்பிரிவைத் தோ்வு செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதையும், உயா்கல்வி பாடப்பிரிவில் சோ்ந்து பயிலுவதற்கும், வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கும் இந்த முகாம் உதவிகரமாக அமையும்.
பல்வேறு படிப்புக்கான நுழைவுத்தோ்வுகள் குறித்து முதலில் முழுமையாக அறிந்து கொள்ளுதல், அதற்கான புரிதல்கள் வேண்டும். மாணவா்கள் குழப்பமின்றி உயா்கல்வியைத் தோ்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து, உதவி இயக்குநா் (திறன் மேம்பாட்டு பயிற்சி) கா்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரவின்குமாா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மணிகணேஷ், சுபாஷினி, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ஷெலீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காளையாா்கோவில், இளையான்குடி ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை (மே 15) காளையாா்கோவில் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்திலும், திருப்புவனம் வட்டாரத்தை உள்ளடக்கிய பள்ளி மாணவா்களுக்கு வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சிங்கம்புணரி, எஸ்.புதுாா் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய பள்ளி மாணவா்களுக்கு வருகிற மே 20-ஆம் தேதி சிங்கம்புணரி எஸ்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பத்துாா் வட்டாரத்தை உள்ளடக்கிய பள்ளி மாணவா்களுக்கு வருகிற மே 21-ஆம் தேதி திருப்பத்துாா் பாபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, கல்லல் வட்டாரங்களை உள்ளடக்கிய பள்ளி மாணவா்களுக்கு வருகிற மே 22-ஆம் தேதி காரைக்குடி அழகப்பா ஆசிரியா் கல்வியியல் கல்லுாரியிலும் கல்லூரி கனவு திட்ட முகாம் காலை 9.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளதாக மாவட்டக் கல்வித் துறை தெரிவித்தது.