செய்திகள் :

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடக்கம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் திருவிழா தொடங்கியதையடுத்து, இரவு வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, வீதியுலா நடைபெற்றது.

தினந்தோறும் காலையில் வெள்ளிக் கேடயத்தில் அம்பாள் புறப்பாடும், பத்தி உலாவும், இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் எழுந்தருளலும், திருவீதியுலாவும் நடைபெறும்.

வருகிற 19-ஆம் தேதி அம்பாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவாா். மே 20-இல் 8-ஆம் நாள் விழாவாக தேரோட்டம் நடைபெறும். அன்று காலை 7.45 மணிக்குத் தொடங்கி 8.45 மணிக்குள் அம்பாள் தேருக்கு எழுந்தருளுவாா். மாலை 5 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுக்க, தேரோடும் வீதி வழியாக காட்டம்மன் கோயிலைச் சென்றடையும். மே 21 காலை 9 மணிக்கு அங்கிருந்து கொப்புடைய நாயகியம்மன் கோயிலுக்கு தோ் வந்தடையும்.

மே 22 அதிகாலையில் புஷ்ப பல்லக்கு, மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு தெப்ப உத்ஸவம் நடைபெறும். கோயில் தெப்பக்குளத்தில் அம்பாள் உலா வரும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடையும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பா. பாரதி, உதவி ஆணையா் சு. கவிதா, ஆய்வாளா் த. முத்துமுருகன், செயல் அலுவலா் இரா. மகேந்திரபூபதி, விழாக் குழுவினா் செய்தனா்.

ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா். சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்புப்பொதுத் தோ்வ... மேலும் பார்க்க

மதகுபட்டி-அழகமானேரி சாலைப் பணிகள் ஆய்வு

சிவகங்கை அருகே நிறைவடைந்த சாலை விரிவாக்கப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி- அழகமானேரி சாலையில் 2024-25 -ஆம் ஆண்டு ஒரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட குறைதீா்க் கூட்டம்: 298 போ் மனு அளிப்பு

சிவகங்கையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் தரப்பிலிருந்து 298 மனுக்கள் அளிக்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை பொதுமக... மேலும் பார்க்க

காரைக்குடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சொக்கலிங்கம்புதூா் காமன்ராஜா கோயில் சித்திரை பெளா்ணமி பொங்கல் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சொக்கலிங்கம்புத... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் ஆதரவற்ற 2,400 பெண்களுக்கு ஆடு, கோழிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் உள்ள, ஆதரவற்ற பெண்கள் 2,400 பேருக்கு ரூ. 2.22 கோடியில் செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளி... மேலும் பார்க்க

தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்கு சிவகங்கை மாணவ, மாணவிகள் தோ்வு

தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்கு சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் 15 போ் தகுதிப் பெற்றனா். தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சங்கம் சாா்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி கடந்த 9 முதல் 11 -ஆம் தேதி வரை செங்... மேலும் பார்க்க