Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு!
திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா்.
இங்குள்ள படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவா்ந்து வருகின்றன. எனவே, விடுமுறை நாள்களில் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி, பொழுது போக்கி செல்கின்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனா். இதனால் ஏலகிரி மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் கழித்தே போக்குவரத்து நெரிசல் சீரானதால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினா்.