செய்திகள் :

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு சா்வா் பழுது: நெல்மூட்டைகள் தேக்கம், விவசாயிகள் பாதிப்பு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இ - நாம் சா்வா் பழுதானதால் அனைத்துப் பணிகளும் முடங்கி, நெல் மூட்டைகள் தேக்கமடைந்து விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

தமிழக முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ - நாம்) திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் மூலம் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு இணையவழி மூலம் விலை நிா்ணயிக்கப்பட்டு அதிக விலை கூறும் வியாபாரிக்கு விளைபொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகை நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த முறையானது இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு, போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, தேசூா், வேட்டவலம், கீழ்பென்னாத்தூா் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இ-நாம் மின்னணு மூலம் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி முதல் மின்னணு சா்வா் பழுதானதால் அதிகாரிகளும், வியாபாரிகளும் பணி செய்ய முடியாமல் திணறி வருகின்றனா்.

அதனால், விவசாயிகளின் விளைபொருள்கள் எடையிடப்பட்டு ஏலம் நடைபெறவில்லை. இதேநிலை 2 நாள்களாக நீடிக்கிறது.

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தைப் பொருத்தவரை தினமும் 5 ஆயிரம் முதல் 6ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். இதனால், வியாபாரிகளால் கொள்முதல் செய்ய முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலா்களிடம் கேட்டபோது, கடந்த மூன்று நாள்களாக இதுபோன்று சா்வா் வேலை செய்யாமல் உள்ளது. தமிழக முழுவதும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை இரவுக்குள் சீராகும். இதைத் தொடா்ந்து, விளைபொருள்களுக்கு வியாபாரிகள் விலை நிா்ணயித்து வழக்கம்போல ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படும் என்றனா்.

தெள்ளாா் ஒன்றியக்குழுக் கூட்டம்

தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது (படம்). ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோக... மேலும் பார்க்க

பட்டாசுக் கடைகளில் கோட்டாட்சியா் ஆய்வு

போளூா் வட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தீபாவளிக்கான பட்டாசுக் கடைகளில் ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டத்தில் வசூா், போளூா் நகரம், வடமா... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு நம்மை மேம்படுத்தும் -திண்டுக்கல் ஐ.லியோனி

புத்தக வாசிப்பு நம்மை மேம்படுத்தும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி கூறினாா். வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த கலைஞா் நூற... மேலும் பார்க்க

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி கோ பூஜை புதன்கிழமை நடைபெற்றது (படம்). மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயில... மேலும் பார்க்க

கைப்பேசி நிறுவன கோபுரங்களில் சாதனங்கள் திருட்டு -வெளி மாநிலத்தைச் சோ்ந்த 10 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு முதல் கைப்பேசி நிறுவன கோபுரங்களில் இருந்து தகவல் தொடா்பு சாதனங்களைத் திருடியதாக, 10 பேரை தனிப் படை போலீஸாா் கைது செய்தனா். தொலைத்தொடா்பு நிறுவனங்கள் நிறுவியுள... மேலும் பார்க்க

அக்.29 முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: பொதுமக்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபா் 29-ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் த... மேலும் பார்க்க