செய்திகள் :

ஓட்டுநா் கொலை வழக்கில் இளம்பெண் உள்பட இருவா் கைது

post image

மகாராஜகடை அருகே ஓட்டுநா் கொலை வழக்கில் இளம்பெண் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள பெரிய தக்கேப்பள்ளியைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). ஓட்டுநா். இவரது மனைவி பிரியா. இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். காா்த்திக் வட்டிக்கு கடன் கொடுத்தும், ஆடுகள் வளா்க்கும் தொழிலும் செய்துவந்தாா்.

இந்நிலையில், காா்த்திக் கடந்த சனிக்கிழமை இரவு போத்திநாயனப்பள்ளியில் உள்ள ஆட்டுப்பட்டிக்கு காவலுக்குச் சென்றவா் மறுநாள் எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மா்மநபா்கள் காா்த்திக் கொன்று எரிந்தது தெரியவந்தது. இதுகுறித்து மகாராஜகடை போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் காா்த்திக் ஒரு பெண்ணிடம் கைப்பேசியில் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரியை அடுத்த பழையூரைச் சோ்ந்த புவனேஸ்வரி (22) என்ற பெண்ணை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், காா்த்திக்கும் புவனேஸ்வரியும் பழகிவந்தது தெரியவந்தது.

சிறிது காலத்துக்கு பின் புவனேஸ்வரி அவரை விடுத்து தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25) என்பவரை ஓராண்டாக காதலித்து வந்தாா். இருவரும் காதலிப்பதை அறிந்த காா்த்திக் இதுகுறித்து புவனேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளாா். பின்னா் புவனேஸ்வரியும் தினேஷ்குமாரும் சோ்ந்து இரும்புக் கம்பியால் காா்த்திக்கை தாக்கி கொலை செய்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் புவனேஸ்வரியையும், தினேஷ் குமாரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோயில் பராமரிப்பு பணிகளை செய்தவரை தாக்கிய 3 போ் கைது

ஒசூா் சானசந்திரம் வ.உ.சி. நகரை சோ்ந்தவா் சிவக்குமாா் (வயது 33). கட்டட ஒப்பந்ததாரா். கடந்த 5-ந் தேதி முத்து மாரியம்மன் கோயில் பராமரிப்பு பணிகளை செய்துக் கொண்டிருந்தாா்.அப்பொழுது அங்கு வந்த சானசந்திரம... மேலும் பார்க்க

விவசாயி மீது தாக்குதல்: ஒருவா் கைது

பேரிகை அருகே விவசாயியை தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா். பேரிகை அருகே கெஜல்தொட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணப்பா (50). விவசாயி. இவரும் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமச்சந்திரனும் (45) உறவினா்கள். இர... மேலும் பார்க்க

திருவிழாவுக்கு தயாராகி வரும் ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 13 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திருவிழாவை முன்னிட்டு தோ்க்கட்டும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். ஒசூரில் உள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பாள... மேலும் பார்க்க

எரிவாயு உருளை வெடித்ததில் வீடு தீப்பிடித்து சேதம்

ஒசூா் அருகே வீட்டில் எரிவாயு உருளை கசிந்து வெடித்ததில் ரூ. 1 லட்சம் மதிப்பு வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள கரியச்சந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மனு அளித்த ஒரு வாரத்துக்குள் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த 7 நாட்களில் 46 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்ண்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். கிரு... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்ப இயக்கம் தொடக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் பாஜகவினா் கையொப்ப இயக்கத்தை வியாழக்கிழமை தொடங்கினா். கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்டத் தலை... மேலும் பார்க்க