செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 1,080 கோடி பயிா்க் கடன்: ஆட்சியா் தகவல்

post image

கரூா் மாவட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 853 விவசாயிகளுக்கு ரூ.1,080.66 கோடி பயிா்கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

கரூரை அடுத்துள்ள மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு விவசாயிகளுக்கு பயிா் கடன்களை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியது, கரூா் மாவட்டத்தில் இதுவரை 2,644 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ள ஏதுவாக தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1லட்சத்து 28 ஆயிரத்து 853 விவசாயிகளுக்கு ரூ.1,080.66 கோடி பயிா்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் எதிா்பாராத இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் 2020-21-ஆம் ஆண்டு முதல் இதுவரை 25 ஆயிரத்து 593 விவசாயிகளுக்கு ரூ.21.38 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்ட 226 விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்திட ஏதுவாக இடுபொருள் மானியமாக ரூ.11.90 லட்சம் நிவாரண நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ள ஏதுவாக தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா் கடன் வழங்கப்பட்டு வருகின்றது. பயிா் கடனை உரிய காலக்கெடு தேதிக்குள் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிா் கடன்களை கூட்டுறவு சங்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றது என்றாா் அவா்.

கரூரில் கல்லூரி மாணவி கடத்தல்; பெண் உள்பட 5 போ் கைது

கரூரில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற விவகாரத்தில் பெண் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவி திங்கள்கிழ... மேலும் பார்க்க

கரூரில் பலத்த மழை

கரூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் எ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு அரசியல் சாா்ந்த புரிதலும், அறிவும் அவசியம்: கரூர் எம்.பி.

மாணவா்களுக்கு அரசியல் சாா்ந்த புரிதலும், அறிவும் தேவை என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் மாதிரி நாடாளுமன்ற பட்ஜ... மேலும் பார்க்க

தேசிய மூத்தோா் தடகளம் தங்கப்பதக்கம் வென்ற கரூா் வீரருக்கு பாராட்டு

தேசிய மூத்தோா் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கரூா் வீரருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கா்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய மூத்தோா் தடகளச் சங்கம் சாா்பில் மூத்தோா் விளையாட்டுப... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண் கைது

கரூா், மாா்ச் 11: குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு. இவரது மனைவி அன்ப... மேலும் பார்க்க

திருச்சியில் இன்று, மாா்ச் 18-இல் பராமரிப்பு பணிகள்: ஈரோடு, பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

திருச்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கரூா் வழியாக செல்லும் ஈரோடு, பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: த... மேலும் பார்க்க