'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள...
தொகுதி மறுசீரமைப்பு: ஜெகன் மோகனுடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு!
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க : அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி, கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000: புதுவை பட்ஜெட் முழு விவரம்
இந்த நிலையில், சென்னையில் வருகிற மார்ச் 22 ஆம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய தமிழக அமைச்சர் எ.வ.வேலு, எம்பி வில்சன் ஆகியோர், கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
அதேபோல், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவுக்கும் அழைப்பு விடுத்தனர்.
ஏற்கெனவே ஒடிஸாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று பிற்பகல் பெங்களூருவுக்குச் செல்லும் எ.வ. வேலு, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை சந்திக்கிறார்.