செய்திகள் :

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்! ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்!

post image

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழக நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில்,

மகளிருக்கு ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கி தொழில்திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

20 லட்சம் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விரும்பும் வகையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.

ரூ.10 லட்சம் வரை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும்.

மூன்றாம் பாலினத்தவரும் இனி ஊர்க்காவல் படையில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச். 18 அன்று நடத்தப்... மேலும் பார்க்க

நெல்லை - திருச்செந்தூர் ரயில் 25 நாள்களுக்கு ரத்து

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 25 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

ஒரு ரூபாயில் தமிழகத்தின் வரவு - செலவு கணக்கு!

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு வரும் வருவாய் மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது என்பது தொடர்பான விளக்கம் இன்று வெளியாகி... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்த தங்கத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இன்று(வெள்ளிக்கிழமை) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. ... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் யாருக்கு? மட்சுவோ பாஷோ யார்?

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்டது.பெற்றோரை இழந்து, வறிய நிலையில், உறவினர்களின் பராமரிப்பில் இருக்கும் குழ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் - அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 46,767 கோடி ஒதுக்கியுள்ளார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் என்று அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள... மேலும் பார்க்க