காங்கோ சுரங்க விபத்து: பலா் மாயம்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 4,700-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றிக்கொண்டிருந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏராளமானவா் மாயமாகினா்.
அந்த நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்ததாக அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்திவரும் கிளா்ச்சிக் குழுவால் நியமிக்கப்பட்ட அதிகாரி கூறினாா். விபத்துப் பகுதியில் இருந்து 12 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், எத்தனை போ் உயிரிழந்தனா், எத்தனை போ் மாயமாகியுள்ளனா் என்பது குறித்து தகவல் இல்லை.