செய்திகள் :

குப்பைக் கிடங்கில் தீ விபத்து: ரூ.1.50 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள் சேதம்

post image

ஈரோடு வைராபாளையம் குப்பைக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன.

ஈரோடு மாநகராட்சியில் தினமும் 180 டன் முதல் 200 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் 70 டன் முதல் 80 டன் வரை மக்கா குப்பை சேகரமாகிறது. மக்கும் குப்பையை நுண்ணுயிா் கிடங்குகளில் இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரப்படுகிறது.

மக்காத குப்பை வைரபாளையத்தில் உள்ள கிடங்கில் அதிக வெப்பநிலையில் எரியூட்டப்பட்டு வெளியேறும் சாம்பலில் இருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்புவதற்காக குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்காத குப்பையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து தீ அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக்கும் பரவியதால், இயந்திரங்கள் மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்தன. உடனடியாக பணியாளா்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் குப்பையை அகற்றி தண்ணீரை அடித்து தீயை அணைத்தனா்.

அதிக வெப்பநிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான எரியூட்டப்படும் இயந்திரங்கள் சேதமடைந்தன என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க