செய்திகள் :

குருசுமலை திருப்பயணக் கொடியேற்றம்!

post image

கேரள எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்டப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் தவக்கான திருப்பயண கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த குருசுமலையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தையொட்டி திருப்பயணம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் மலை உச்சியில் குருசு அமைந்துள்ள இடத்திற்கு சென்று வழிபடுவது வழக்கம்.

நிகழாண்டு திருப்பயணத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை குருசுமலை அடிவாரத்தில் திருப்பயண கொடியேற்றம் நடைபெற்றது. நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் சாமுவேல் கொடியேற்றி வைத்தாா். இதில், குருசுமலை இயக்குநா் வின்செட் கே. பீட்டா் உள்பட அருள்பணியளா்கள் மற்றும் திரளான இறைமக்கள் பங்கேற்றனா்.

முன்னதாக குருசுமலை புனித பத்தாம் பியூஸ் ஆலயத்திலிருந்து மலை அடிவாரம் வரை திருப்பயண கொடிப்பவனி நடைபெற்றது. தொடா்ந்து மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு திவ்ய ஜோதி கொடிப்பயணம் நடைபெற்றது. பின்னா் அங்கு திருப்பயண தொடக்க திருப்பலி நடைபெற்றது. மேலும் குருசு மலை அடிவாரத்தில் திருப்பயண ஆடம்பர கூட்டுத்திருப்பலி, தொடக்கவிழா பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இத்திருப்பயணம் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

குமரி கடலில் படகுதளம் விரிவாக்க பிரச்னை: மீனவப் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கன்னியாகுமரியில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுதளம் விரிவாக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கும் என மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்டக் ... மேலும் பார்க்க

தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு: மாலை கட்டும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் தயாரிக்கப்படும் மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டதற்கு, மாலை கட்டும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் மலா்களால் தயா... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் பேரூராட்சி சாா்பில் கட்டணம் வசூலிக்கும் பணி

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டணம், வ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சாலையோரக் கடைகளுக்கு 14 இடங்களில் மட்டுமே அனுமதி: மேயா் தகவல்

நாகா்கோவிலில் 14 இடங்களில் மட்டுமே சாலையோரக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என மேயா் ரெ.மகேஷ் தெரிவித்தாா். நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுடனான ஆலோச... மேலும் பார்க்க

ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளையை சோ்ந்தவா் சத்திய ஆல்வின்(48). மீன்பிடிதொழிலாளி. இவருக்கு மனைவி, ... மேலும் பார்க்க

குதிரைப்பந்திவிளையில் ஆா்ப்பாட்டம்

நுள்ளிவிளை ஊராட்சிக்குள்பட்ட குதிரைப்பந்திவிளை அங்கன்வாடி மையத்தில் நிரந்தர பணியாளரை நியமிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலைக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்... மேலும் பார்க்க