செய்திகள் :

குருமூர்த்தி, சைதை துரைசாமியுடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது: ராமதாஸ்

post image

பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோருடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள தனது இல்லத்திலிருந்து கார் மூலம் சென்னைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் சனிக்கிழமை காலை (ஜூன் 7) புறப்பட்டுச் சென்றார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், மருத்துவப் பரிசோதனைக்காக சென்னைக்கு செல்லவில்லை. நான் நலமாக உள்ளேன். குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக சென்னை செல்கிறேன்.

ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் என்னை சந்தித்து பேசிவிட்டுச் சென்றனர். அது நட்பு ரீதியிலான சந்திப்பாகும். அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

குருமூர்த்தியுடனான எனது நட்பு நீண்டநாள் நட்பாகும். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அதேபோன்று, சைதை துரைசாமியுடனும் எனக்கு நீண்டநாள் நட்பு உண்டு.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்து சந்தித்து பேசினார். சென்னையிலிருந்து திங்கள்கிழமை தைலாபுரம் வருகிறேன். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறேன் என்றார் ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாகவும், தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக இருப்பார் என்றும் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

கட்சிக்கு புதிய மாவட்டச் செயலர்களை ராமதாஸ் நியமித்து வரும்நிலையில், ஏற்கெனவே அந்த பொறுப்பில் இருப்பவர்கள் பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தை ராமதாஸ், தாய் சரஸ்வதி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோரும் வியாழக்கிழமை தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து, 3 மணி நேரத்துக்கு மேலாக பாமக நிறுவனர் ராமதாஸுடன் ஆலோசனை நடத்திச் சென்றனர். தனது நீண்டகால நண்பர் ராமதாஸ் என்ற அடிப்படையில், அவரைச் சந்திக்க வந்ததாக குருமூர்த்தி தெரிவித்தார்.

இதையும் படிக்க:டெய்லர் முதல் யூடியூபர் வரை.. உளவாளிகளுக்கான உத்திகளை மாற்றியிருக்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ!

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு... மேலும் பார்க்க

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க