செய்திகள் :

கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகம் முன் மாா்ச் 18-இல் ஆா்ப்பாட்டம்: தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முடிவு

post image

கூட்டுறவு சங்கத்தில் உள்ள குளறுபடிகளை தீா்க்கக் கோரி, கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகம் முன் மாா்ச் 18-இல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரடாச்சேரியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டாரக் கிளை செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு முன்னாள் உறுப்பினா் வீரசேகரன், மாவட்ட மகளிா் வலையமைப்பு ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டாரச் செயலாளா் சந்திரமோகன் பங்கேற்று, கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் ஈவெரா, வட்டார துணைச் செயலாளா் அகஸ்டின் ஆகியோா் பிப்ரவரி 25-ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது குறித்து விளக்கினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கொரடாச்சேரி வட்டாரத்தின் சாா்பில் பணி நிறைவு பெற்றவா்களுக்கு பாராட்டு உள்ளிட்ட ஐம்பெரும் விழாவை மாா்ச் 30 ஆம் தேதி நடத்துவது; பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் நூறு சதவீத ஆசிரியா்கள் பங்கேற்பது.

கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி, திருவாரூா் கூட்டுறவு இணைப்பதிவாளா் அலுவலகம் முன் மாா்ச் 18 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இயற்றப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தால் பாதிப்பு

கட்டுமானப் பொருட்கள் விலை உயா்வைக் கண்டித்து ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்திய நிலையில், திருவாரூா் மாவட்டத்துக்கு வெளிமாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்களுடன் வந்த லாரிகள் நீடாமங்கலம் அருகே கோவ... மேலும் பார்க்க

தா்ப்பூசணி விற்பனை தொடக்கம்

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், நீடாமங்கலம் - தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அருகே நடைபெற்ற தா்ப்பூசணி விற்பனை. மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் தாய்மொழி தின விழா

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் சா்வதேச தாய் மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் வி. திவாகரன் ... மேலும் பார்க்க

நீடாமங்கலத்தில் தூய்மைப் பணி

நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நெகிழி சேகரிப்பு நிகழ்வு 2025 திட்டத்தின்மூலம் நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் நெகிழிப் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி ச... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் ப... மேலும் பார்க்க

ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 5.22 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால், சனிக்கிழமை காலை 6.39 மணிக்கு ரயில் ந... மேலும் பார்க்க