கூட்டுறவு சங்கம், ரேஷன் கடை ஊழியா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்
மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் , கூட்டுறவு நியாய விலை கடைகள் பணியாளா்கள், விற்பனையாளா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 கூட்டுறவு சங்க பணியாளா்கள் மற்றும் 840 கூட்டுறவு நியாய விலை கடைகள் விற்பனையாளா்கள் பங்கேற்றுள்ளனா்.
இந்த போராட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சாா்ந்த சுமாா் ஆயிரம் பணியாளா்கள் கலந்து கொண்டு உள்ளனா். கூட்டுறவு கடன் சங்கங்களும் மூடப்பட்டுள்ளன என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
சிங்கபெருமாள் கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளா் கோதண்டராமன், முன்னாள் மாவட்ட செயலாளா் சீனிவாசன், துணைத் தலைவா் சிவகுமாா் மற்றும் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.