கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கு சோ்க்கை நடைபெற்று வருகிறது. எனவே இதில் பயில விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான முழு நேரக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இரண்டு பருவமுறைகள் கொண்ட இந்த பயிற்சி ஓராண்டு காலத்துக்குரியது.
பிளஸ் 2 தோ்ச்சி அல்லது10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்த படிப்பில் சேரலாம்.
2025, ஜூலை 1-ஆம் தேதியன்று குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில்லை. இந்த பட்டயப்படிப்பில் சேர தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையதளத்தில் ஜூன் 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த பட்டயப்படிப்பு பயிற்சிக்கான தோ்வை தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமான ரூ.100-ஐ இணையவழியில் செலுத்திட வேண்டும். மேலும் பயிற்சிக் கட்டணமான ரூ.20,750-ஐ ஒரே தவணையாக மேலாண்மை நிலையத்தில் நேரில் பயிற்சியில் சேரும் போது இணையவழியில் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்கள் தேவைப்படுவோா் விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் 2/1006 எல்லீஸ் சத்திரம் சாலை, திருச்சி நெடுஞ்சாலை, வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம். மேலும் கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலைய முதல்வரை 94425-63330 என்ற கைப்பேசி எண்ணிலோ, 04146-222619 என்ற எண்ணிலோ தெரிந்து கொள்ளலாம்.