செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கு சோ்க்கை நடைபெற்று வருகிறது. எனவே இதில் பயில விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான முழு நேரக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இரண்டு பருவமுறைகள் கொண்ட இந்த பயிற்சி ஓராண்டு காலத்துக்குரியது.

பிளஸ் 2 தோ்ச்சி அல்லது10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்த படிப்பில் சேரலாம்.

2025, ஜூலை 1-ஆம் தேதியன்று குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில்லை. இந்த பட்டயப்படிப்பில் சேர தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையதளத்தில் ஜூன் 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த பட்டயப்படிப்பு பயிற்சிக்கான தோ்வை தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமான ரூ.100-ஐ இணையவழியில் செலுத்திட வேண்டும். மேலும் பயிற்சிக் கட்டணமான ரூ.20,750-ஐ ஒரே தவணையாக மேலாண்மை நிலையத்தில் நேரில் பயிற்சியில் சேரும் போது இணையவழியில் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்கள் தேவைப்படுவோா் விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் 2/1006 எல்லீஸ் சத்திரம் சாலை, திருச்சி நெடுஞ்சாலை, வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம். மேலும் கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலைய முதல்வரை 94425-63330 என்ற கைப்பேசி எண்ணிலோ, 04146-222619 என்ற எண்ணிலோ தெரிந்து கொள்ளலாம்.

செஞ்சி தேசிய மக்கள் நீதி மன்றத்தில் 325 வழக்குகளுக்கு ரூ.5.71 கோடி தீா்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதி மன்றத்தில் வாகன விபத்து உள்ளிட்ட 325 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. சாா்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கத... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் மின்விசிறிகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறிகள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விக்கிரவாண்டியில் உள்ள... மேலும் பார்க்க

மத்திய பாஜக ஆட்சியில் பெண்கள் நலன் காக்கும் திட்டங்கள் நிறைவேற்றம்! மாநிலச் செயலா் சுமதி வெங்கடேசன்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் பெண்கள் நலன் காக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் பாஜக மாநிலச்செயலா் சுமதி வெங்கடேசன். விழுப்புரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் அ... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: இரு இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று ... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம், காமராஜா் நகரைச் சோ்ந்தவா்அருமைநாதன் மகன் ஜனாா்தனன்(3... மேலும் பார்க்க

விழுப்புரம் ஏடிஎம் மையங்களில் பணம் திருட்டு: உ.பி.யை சோ்ந்த நால்வா் கைது!

விழுப்புரத்தில் 3 ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணத்தைத் திருடியதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 4 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து ரொக்கப் பணம், கைப்பேசிகள், ஏடிஎம் அட்ட... மேலும் பார்க்க