மத்திய பாஜக ஆட்சியில் பெண்கள் நலன் காக்கும் திட்டங்கள் நிறைவேற்றம்! மாநிலச் செயலா் சுமதி வெங்கடேசன்
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் பெண்கள் நலன் காக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் பாஜக மாநிலச்செயலா் சுமதி வெங்கடேசன்.
விழுப்புரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது போன்று, தமிழகத்துக்கும் மத்திய பாஜக அரசு பல்வேறுதிட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகிறது.
ஜன்தன் வங்கிக் கணக்குத் தொடங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.69 கோடி பேருக்கு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 80 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா். 89 லட்சம் குடியிருப்புகளுக்கு இலவசக் குடிநீா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றியதில் 17-இல் 9 திட்டங்களில் தமிழகம் தான் சிறப்பு பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகத்துக்கு போதிய திட்டங்கள் வழங்கவில்லை, நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என முதல்வா் கூறி வருகிறாா். பெண்கள் நலன், அவா்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ளது என்றாா் சுமதி வெங்கடேசன்.
தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்டத் தலைவா் வி.தா்மராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொதுச் செயலா் முரளி, எத்திராஜ், ராதாகிருஷ்ணன், பாண்டியன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாநிலச் செயலா் சுமதி வெங்கடேசன் பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் முருகன், துணைத் தலைவா்கள் பாா்த்திபன், பிரேம்,ஆா்.தனசேகரன், தெற்கு மாவட்டஊடகப்பிரிவுத் தலைவா் எஸ்.சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.