செய்திகள் :

கேரள காங்கிரஸாா் ஒற்றுமையுடன் உள்ளனா்: சசி தரூா் விவகாரத்தை தொடா்ந்து ராகுல் உறுதி

post image

கேரள காங்கிரஸாா் ஒற்றுமையுடன் இருப்பதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கேரளத்தில் முதலீடு செய்வதற்கான சூழலை இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைமையிலான மாநில அரசு மேம்படுத்தியுள்ளதாக பாராட்டி, ஆங்கில நாளிதழில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் அண்மையில் கட்டுரை எழுதினாா்.

இதைத்தொடா்ந்து மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அரசை, எதிா்க்கட்சியான காங்கிரஸை சோ்ந்த சசி தரூா் பாராட்டியதற்கு அவரின் சொந்த கட்சியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு கேரள சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் எவ்வாறு செயல்பட வேண்டும்?, தோ்தலுக்கான உத்திகள் குறித்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேரள காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘காங்கிரஸின் தோ்தல் உத்திகள் மீது கேரள காங்கிரஸாா் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கட்சி விதிகளை மீறி எவரும், எதுவும் பேசக் கூடாது’ என்று அறிவுறுத்தினாா்.

இந்நிலையில், கேரள காங்கிரஸாரின் புகைப்படத்தை ராகுல் காந்தி பேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு, அந்த மாநில காங்கிரஸ் கட்சியினா் ஒற்றுமையுடன் இருப்பதாகத் தெரிவித்தாா்.

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் ... மேலும் பார்க்க

ஐஆர்சிடிசி-க்கு நவரத்னா அந்தஸ்து! அப்படியென்றால்?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தற... மேலும் பார்க்க

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ர... மேலும் பார்க்க