செய்திகள் :

கொடநாடு வழக்கு: தலைமறைவான அதிமுக நிர்வாகி சஜீவன் ஆஜராக சிபிசிஐடி சம்மன்; காவல்துறை சொல்வதென்ன?

post image

கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களைக் கண்டு வரும் நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள நபர்களைக் கோவை மாவட்டத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடநாடு வழக்கு விசாரணை

முக்கிய சாட்சிகள் சிலரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மிக முக்கிய சாட்சியான அ.தி.மு.க மாநில வர்த்தக அணி தலைவரும் பிரபல மர வியாபாரியுமான சஜீவனை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "கொடநாடு வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை முதல் தற்போது வரை சஜீவன் பெயர் தொடர்ந்து அடிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி கொடநாடு பங்களாவில் மரவேலை செய்து கொடுத்த சஜீவனுக்குப் பங்களாவின் மூலைமுடுக்குகள் எல்லாமே அத்துப்படி. இதனாலேயே சஜீவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது.

சஜீவன்

நீலகிரியில் வனவிலங்கு வேட்டையாடப்பட்டது தொடர்பாக சஜீவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கடந்த சில மாதங்களாக அவர் தலைமறைவாக இருப்பதாகத் தெரிகிறது. வருகின்ற நவம்பர் மாதம் 5-ம் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஆஜராகாத படத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

பாபா சித்திக் கொலை: பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் துப்பாக்கிகள் வந்தனவா? காவல்துறை தீவிர விசாரணை

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக், கடந்த 12ம் தேதி அவரது மகனின் அலுவலகத்திற்கு வெளியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமா... மேலும் பார்க்க

ஊட்டி: வகுப்பறையில் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி; தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்; நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கிராமம் ஒன்றில் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பாட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று (அக... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை - சஸ்பெண்ட் காவலர் சிக்கிய பின்னணி

தென்சென்னையைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றம்) என்ற இளம்பெண், ஸ்பா ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 17.10.2024-ம் தேதி தன்னுடைய கணவருடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். வரும் வழியில் ... மேலும் பார்க்க

சென்னை: நைஜீரிய நெட்வொர்க்குடன் தொடர்பு; போதைப்பொருள் வழக்கில் முன்னாள் டிஜிபி மகன் கைது!

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னைப் போலீஸார் எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன்... மேலும் பார்க்க

சென்னை: 5,230 நோட் பேடுகளுடன் கன்டெய்னர் கடத்தல்; கோடீஸ்வரனாக ஆசைப்பட்ட பட்டதாரியின் மாஸ்டர் பிளான்!

சீனாவிலிருந்து சரக்கு கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு கடந்த மாதம் கன்டெய்னரில் 34 கோடி ரூபாய் மதிப்பிலான note pad கொண்டு வரப்பட்டது. நோட் பேடு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் துறைமுகத்தில் உள்ள சென்ன... மேலும் பார்க்க

கணவன் கொலையில் சிக்கிய மனைவி; உடந்தையாக இருந்த விசிக நிர்வாகியும் திடீர் தற்கொலை - நடந்தது என்ன?!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஆரணி அடுத்துள்ள பையூர் கிரா... மேலும் பார்க்க