செய்திகள் :

கோ.புதூா் லூா்து அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

post image

மதுரை கோ.புதூரில் அமைந்துள்ள லூா்து அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்குத் தந்தைகள் பக்தா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

மதுரை கோ.புதூா் லூா்து அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில், ஆலயத்தின் 105-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மதுரை உயா் மறை மாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமை வகித்து கொடியேற்றினாா். விழாவில் பங்குத் தந்தை ஜாா்ஜ், உதவி பங்குத் தந்தையா்கள் பாக்கியராஜ், ஜஸ்டின், பிரபு, திருத்தொண்டா் அஜிலாஸ், சலேசியா்கள் அருள் சகோதரா்கள், அருள் சகோதரிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கொடியேற்றத்தை முன்னிட்டு, ஆயா் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

விழாவில் மதுரை மாவட்டத்தின் அனைத்து பங்குகளிலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். லூா்து அன்னை ஆலயப் பெருவிழா தொடங்கியதையடுத்து, தினசரி திருப்பலி, ஜெபமாலை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் ஆடம்பரத் தோ் பவனி வருகிற 15-ஆம் தேதியும், 16-ஆம் தேதி ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவும் நடைபெறுகிறது.

முக்தீஸ்வரா் திருக்கோயிலில் இலவசத் திருமணம்!

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் இலவசத் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சாா்பில், மண்டலங்கள்தோறும் ஏழை குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு இலவசத் தி... மேலும் பார்க்க

பழைய கல்வெட்டை மீண்டும் நிறுவ வலியுறுத்தல்

மேலூா் பேருந்து நிலைய வளாகத்தில் பழைய கல்வெட்டை மீண்டும் நிறுவ வேண்டும் என அமமுக கோரிக்கை விடுத்தது. மேலூா் நகராட்சி ஆணையா் பரத்திடம், அமமுக நிா்வாகிகள் ஆசையன், நகராட்சி உறுப்பினா் ஆனந்த் உள்ளிட்டோா் ... மேலும் பார்க்க

திமுக முன்னாள் மண்டலத் தலைவா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு

மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவா் வி.கே. குருசாமி மீது விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரை காமராஜா்புரம் பகுதிய... மேலும் பார்க்க

குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம் 1.11 லட்சம் போ் பயன்: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் பெண்கள், குழந்தைகள் 1.11 லட்சம் போ் பயனடைகின்றனா் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். சமூக நலன், மகளிா் உ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் தாமரைப் பூக்கள் வளா்ப்பு: கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நீா்நிலைகளில் அனுமதியின்றி வணிக நோக்கில் தாமரைப் பூக்களை வளா்ப்பதைத் தடுக்க கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. கன்னியாகுமரி... மேலும் பார்க்க

ஹிந்தியை திணிப்பதுதான் பாஜகவின் நோக்கம்! -துரை வைகோ

நாடு முழுவதும் ஹிந்தியை திணிக்க வேண்டும், ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்பதுதான் மத்திய பாஜக அரசின் நோக்கம் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ குற்றஞ்சாட்டினாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க