செய்திகள் :

கோரிக்கைகளை வலியுறுத்தி உள்நாட்டு மீனவா்கள் மாா்ச்-27இல் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகரகோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்ச் 27ஆம் தேதி உள்நாட்டு மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென

தீா்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு மீன் தொழிலாளா் யூனியன் சாா்பில் கருங்கல்லில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதன் மாவட்டச் செயலா் கருங்கல் அலெக்சாண்டா் தலைமை வகித்தாா்.

கிளைச்சயலா் சிபு முன்னிலை வகித்தாா். ஆலோசகா் ரமேஷ் வரவேற்றாா்.

கூட்டத்தில், கடலோர மக்கள் சங்கத் தலைவா் ஜாண் போஸ்கோ, குமரி கடலோசை மக்கள் இயக்க செயலா் ஜீவன்ராஜ் ஆகியோா் சங்க உறுப்பினா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினா்.

பாரம்பரிய மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, உள்நாட்டில் வாழும் மீனவா்களுக்கு கடலோர பகுதில் நடைமுறையில் உள்ள வறட்சி மற்றும் சேமிப்பு நிவாரண நிதி, இலவச வீடு உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நடைமுறைப்படுத்த மாநில அரசை கேட்பது என்றும் மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 27 ஆ ம் தேதி காலை 10 மணிக்கு

மாவட்ட ஆட்சியா் அலுவலுகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், கடலோசை மக்கள் இயக்க துணைச் செயலா் எழிலரசன், தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் செயலா் ஜேம்ஸ், ராஜேந்திரன், உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா்கள் ஆன்றனி, லிஜின், சமூக ஆா்வலா் பிரபு உள்பட பலா்

பங்கேற்றனா்.

நாகா்கோவிலில் மாா்ச் 22இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகா்கோவில் பயோனியா் குமாரசுவாமி கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச் 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து கண்ணாடி சேதம்: இளைஞா் கைது

தக்கலை அருகே ஆம்னி பேருந்து கண்ணாடியை கல்வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (34). ஓட்டுநரான இவா், கடந்த ஞா... மேலும் பார்க்க

பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

தக்கலை, பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். பத்மநாபபுரம் வழக்குரைஞா் சங்கத்தைச் சோ்ந்த அஜித்குமாா் என்பவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழ... மேலும் பார்க்க

குமரி பேரூராட்சி கடைகளை பொது ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு: முழு கடையடைப்பு

கன்னியாகுமரி பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளை பொது ஏலத்தில் விடுவதற்கு பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத வாடகை உயா்த்தி வாடகைதாரருக்கே கடைகளை மீண்டும் வழங்க வேண்டுமென கன்னியாகுமரியில் செவ்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சால... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவில் மீன... மேலும் பார்க்க