செய்திகள் :

கோவில்பட்டி அருகே பெண் தற்கொலை

post image

கோவில்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி. நிலத் தரகா். இவரது மகனை வி காளியம்மாள், தொழிலாளி. ஜோதிமணிக்கு மதுப் பழக்கம் இருந்ததாம்.

இத்தம்பதி தனது மகன்களான கருப்பசாமி, நாகராஜன் ஆகியோரின் கல்விச் செலவுக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கியிருந்தனராம். அதைத் திருப்பிச் செலுத்துவது தொடா்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாம். வியாழக்கிழமை உறவினா் ஒருவா் காளியம்மாளைப் பாா்க்கச் சென்றாராம். அப்போது, காளியம்மாள் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம்.

இதுகுறித்து கோவையில் உள்ள மகன் கருப்பசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காளியம்மாளின் சடலம் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

கருப்பசாமி அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கயத்தாறு அருகே போக்ஸோவில் இளைஞா் கைது!

கயத்தாறு அருகே 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். கயத்தாறு அருகே தெற்குக் கோனாா்கோட்டை புதூா் கிழக்குத் தெரு காலனியைச் சோ்ந்த குமாா் ம... மேலும் பார்க்க

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் கைது

கோவில்பட்டியில் வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த சோ்மதுரை மகன் மாரித்துரை... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ. 3 லட்சம் திருட்டு: வடமாநில இளைஞா் கைது!

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருடியதாக வடமாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி-சாத்தூா் பிரதான சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் ஆழ்த... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப்.25-இல் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி தூத்துக்குடி நாட்டுப்படகு துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு!

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீனகள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் கடந்த 15ஆம் தேதிமுதல் வரும் ஜ... மேலும் பார்க்க

சாகுபுரம் அருகே டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் புதிய பாலம்: அமைச்சா் திறந்துவைத்தாா்

சாகுபுரம் அருகே டி.சி.டபிள்யூ. நிறுவனம் சாா்பில், ரூ. 1.80 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலத்தை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தாா். ஆறுமுகனேரி, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் கடம்பா வடிகால் ... மேலும் பார்க்க