செய்திகள் :

கோவை கோட்டத்தில் 1,171 நகரப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெறும் வசதி

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில் 1,171 நகரப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் (யுபிஐ சேவை) பயணச்சீட்டு பெறும் நடைமுறை விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்துக்குள்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 2,559 புகா், நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், கோவையில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளில் ஜி-பே உள்ளிட்ட யுபிஐ ஸ்கேனா் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டுகள் பெறும் முறை அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த நடைமுறை நகரப் பேருந்துகளிலும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஜி-பே, போன் - பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை கோட்டத்தில் இயக்கப்படும் புகா் பேருந்துகளில் 1,388 அரசுப் பேருந்துகளில் யுபிஐ சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், கோவை கோட்டத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளிலும் யுபிஐ சேவை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என்றாா்.

பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரதியாா் பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்

கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்து... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க