செய்திகள் :

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை (ஏப்ரல் 2) தொடங்குகிறது. தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா, மலா் பல்லக்கில் அதிமூா்க்கம்மன் வீதி உலா, வேள்வி ஆகியவை நடைபெற உள்ளன.

ஏப்ரல் 3-ஆம் தேதி இரவு 9 மணிக்கு சூா்யபிரபை, சந்திரபிரபையில் அம்மன் திருவீதி உலா, 4-ஆம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு 8 மணிக்கு பூத, சிம்ம வாகனங்களில் அம்மன் திருவீதி உலா, 5-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மலா் ரதம் மற்றும் காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 6-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் அறுபத்து மூவா் அருள்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன.

7-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூா்த்திகள் வீதி உலா ஆகியவையும், 8-ஆம் தேதி மாலை 4.35 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல், 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.

பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரதியாா் பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்

கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்து... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க

டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மேற்பாா்வைப் பொறியாளா் சி.சதீஷ்குமாா் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க