செய்திகள் :

சண்டை அல்லது மரணம்! பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக 1.5 லட்சம் பேர் போராட்டம்!

post image

பிரிட்டனில் புலம்பெயர்வுக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் சேர்ந்து மாபெரும் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அந்நாட்டினர் மாபெரும் போராட்டத்தை சனிக்கிழமையில் முன்னெடுத்தனர்.

தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் (42) தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில் ஈடுபட்ட சிலர், காவல்துறையினர் மீது தாக்குதலும் நடத்தினர். கூட்டத்துக்குள் இருந்து காவல்துறையினர் மீது பாட்டில்களை வீசியதில், 26 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அமைதியைச் சீர்குலைத்தல், வன்முறை, தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இந்தப் பேரணியைக் குறிப்பிட்டுப் பேசிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான பிரிட்டன் அரசைக் கலைக்க வேண்டும் என்று கூறினார்.

போராட்டக்காரர்களுடன் விடியோ அழைப்பில் பேசிய எலான் மஸ்க், ``நீங்கள் வன்முறையைத் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும், வன்முறை உங்களைத் தேடி வருகிறது.

நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது நீங்கள் இறந்துவிட வேண்டும். அதுதான் உண்மை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், கட்டுப்பாடற்ற புலம்பெயர்வு பிரிட்டனை அழித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதையும் படிக்க:பார்வையிழந்த மனைவிக்கு வாழ்நாள் சத்தியம்! அன்புக் கணவருக்கு குவியும் பாராட்டுகள்!

Tommy Robinson's Unite the Kingdom rally in London

சார்லி கிர்க்கின் கொலையை முன்பே கணித்த பாதுகாவலர்! முன்னெச்சரிக்கை உதாசீனம்!

அமெரிக்காவில் திருப்புமுனை அமைப்பின் நிறுவனர் சார்லி கிர்க்கின் கொலை அச்சுறுத்தல் குறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்ததாக பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொ... மேலும் பார்க்க

சார்லி கிர்க்கை கொன்ற ராபின்சன் தன்பாலின ஈர்ப்பாளரா? யார் அந்த அறை நண்பர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க்கை (31 வயது), ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கொன்றதாக புலனாய்வுப் பிரிவு அவரைக் கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்தது.ராபின்சனின் அறை நண்பர... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மோதலில் 12 வீரா்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு கைபா் பக்துன்க்வா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரா்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 35 பயங்கரவாதிகளும் கொ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித்துறை ஆவணங்கள் சேதம்: நேபாள உச்சநீதிமன்றம்!

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித் துறை சாா்ந்த முக்கிய வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை சேதமடைந்ததாக நேபாள உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதள தடைக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய ... மேலும் பார்க்க

ஹமாஸுடனான போரில் சட்ட திட்டங்களைப் பின்பற்றவில்லை! இஸ்ரேல் முப்படை தளபதி

ஹமாஸுடனான போரில் தங்களது படையினா் சா்வதேச சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை என்று, 17 மாதங்களாக அந்தப் போரை நடத்திய இஸ்ரேல் முப்படை தளபதி ஹொ்ஸி ஹலேவி ஒப்புக்கொண்டுள்ளாா். மேலும், காஸாவில் இஸ்ரேல் நடத்த... மேலும் பார்க்க

நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: முக்கியக் கட்சிகள் கண்டனம்!

நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபா் ராமசந்திர பௌடேலின் முடிவுக்கு முக்கியக் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன. ராமசந்திர பௌடேலின் முடிவுகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும், இது ஜ... மேலும் பார்க்க