செய்திகள் :

சார்லி கிர்க்கின் கொலையை முன்பே கணித்த பாதுகாவலர்! முன்னெச்சரிக்கை உதாசீனம்!

post image

அமெரிக்காவில் திருப்புமுனை அமைப்பின் நிறுவனர் சார்லி கிர்க்கின் கொலை அச்சுறுத்தல் குறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்ததாக பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் செப்.10 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் டைலர் ராபின்சன் (22) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பே, அவருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக முன்னெச்சரிக்கை விடப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரவிருக்கும் நிகழ்ச்சிகளில் சார்லி கிர்க் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் 100 சதவிகிதம் என்று பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் கிரிஸ் ஹெர்சாக் மார்ச் மாதத்திலேயே எச்சரிக்கை விடுத்தார்.

இருப்பினும், கிரிஸின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்திவந்த சார்லி, தொடர்ந்து முன்னெச்சரிக்கை இல்லாத நிகழ்ச்சிகளில் பேசி வந்தார். இந்த நிலையில்தான், செப். 10 ஆம் தேதியில் யூட்டா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சார்லி கிர்க்கின் கொலை சம்பவம் குறித்து கிரிஸ் கூறுகையில், சார்லிக்கு எச்சரிக்கை விடுத்ததில் இருந்து அவர் என்னிடம் வரவில்லை. ஆனால், அவரது கொலை குறித்த எனது கணிப்பு நடந்தேறி விட்டது.

வரவிருக்கும் ஏதேனும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கான ஆபத்து இருப்பதாக எனது குழுவினர் முன்பே உணர்ந்திருந்தனர்.

சார்லியை பாதுகாக்க குண்டு துளைக்காத கண்ணாடி கவசங்களையும், 700 மீ சுற்றளவில் இருப்போரையும் கண்டறியும் மெட்டல் டிடெக்டர்களையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினேன். எவரேனும் சார்லியின் தலையில் சுடுவர் என்று எச்சரித்தேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:சார்லி கிர்க்கை கொன்ற ராபின்சன் தன்பாலின ஈர்ப்பாளரா? யார் அந்த அறை நண்பர்?

Charlie Kirk was warned he would be 100% killed.

சார்லி கிர்க்கை கொன்ற ராபின்சன் தன்பாலின ஈர்ப்பாளரா? யார் அந்த அறை நண்பர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க்கை (31 வயது), ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கொன்றதாக புலனாய்வுப் பிரிவு அவரைக் கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்தது.ராபின்சனின் அறை நண்பர... மேலும் பார்க்க

சண்டை அல்லது மரணம்! பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக 1.5 லட்சம் பேர் போராட்டம்!

பிரிட்டனில் புலம்பெயர்வுக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் சேர்ந்து மாபெரும் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லண்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அந்நாட்டினர் மாபெரும் போராட்டத்தை சனிக்கிழமையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மோதலில் 12 வீரா்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு கைபா் பக்துன்க்வா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரா்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 35 பயங்கரவாதிகளும் கொ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித்துறை ஆவணங்கள் சேதம்: நேபாள உச்சநீதிமன்றம்!

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித் துறை சாா்ந்த முக்கிய வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை சேதமடைந்ததாக நேபாள உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதள தடைக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய ... மேலும் பார்க்க

ஹமாஸுடனான போரில் சட்ட திட்டங்களைப் பின்பற்றவில்லை! இஸ்ரேல் முப்படை தளபதி

ஹமாஸுடனான போரில் தங்களது படையினா் சா்வதேச சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை என்று, 17 மாதங்களாக அந்தப் போரை நடத்திய இஸ்ரேல் முப்படை தளபதி ஹொ்ஸி ஹலேவி ஒப்புக்கொண்டுள்ளாா். மேலும், காஸாவில் இஸ்ரேல் நடத்த... மேலும் பார்க்க

நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: முக்கியக் கட்சிகள் கண்டனம்!

நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபா் ராமசந்திர பௌடேலின் முடிவுக்கு முக்கியக் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன. ராமசந்திர பௌடேலின் முடிவுகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும், இது ஜ... மேலும் பார்க்க