செய்திகள் :

TVK Vijay: ``நன்றி, மன வருத்தம், மீண்டும் வருவேன்'' - பெரம்பலூர் மக்களுக்கு விஜய் வேண்டுகோள்

post image

தவெக தலைவர் விஜய் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கியிருக்கிறார். திருச்சி மற்றும் அரியலூரில் மக்களிடையே உரையாடியவர், குன்னம் வரை மக்களை சந்தித்தார்.

விஜய்யின் அறிவிக்கப்பட்டத்த திட்டத்தின்படி, பெரம்பலூர் செல்ல இயலாததால் இன்னொரு நாளில் பெரம்பலூர் மக்களைச் சந்திப்பதாக சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார்.

விமான நிலையத்தில் விஜய்

இதுகுறித்து வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது.

தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

விஜய்யை காண திரண்ட கூட்டம்

இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.

வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்." எனக் கூறியுள்ளார்.

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்ற சுசீலா கார்கி - அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் எப்போது?

இந்த வாரத்தின் தொடக்கத்தில், நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினரின் போராட்டம் ஆரம்பமானது.சமூக வலைதளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக தொடங்கிய இந்தப் போராட்டம், ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது.வன்முறைக்கு ... மேலும் பார்க்க

``தடைகளும், வரிகளும் பிரச்னையை தீர்க்காது, மேலும் மோசமாக்கும்'' - ட்ரம்புக்கு சீனா பதிலடி

"ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த, நேட்டோ நாடுகள் சீனா மீது 50 - 60 சதவிகித வரி விதிக்க வேண்டும். நேட்டோ நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது. ரஷ்யா மீது வரி விதிக்க வேண்டும்" என்று ந... மேலும் பார்க்க

``மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கு; நான் நேர்மையாக சம்பாதிக்கிறேன்'' - நிதின் கட்கரி

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த புதிய புதிய சாலைகளை அமைத்து வருகிறார். அதேசமயம் எரிபொருளில் எத்தனாலை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்... மேலும் பார்க்க

``டாஸ்மாக்கில் ரூ.40,000 கோடி ஊழல், மேலிடம் வரை எல்லோருக்கும் தொடர்பு'' - எடப்பாடி குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் பிரசார பயணம் செய்தார். சிங்காநல்லூர் அருகே பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது... மேலும் பார்க்க

பாலஸ்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு - ஐநாவில் நிறைவேறிய தீர்மானம்; அமெரிக்கா அதிருப்தி

பாலஸ்தீன பிரச்னையை அமைதியாக தீர்க்கவும், இரு-நாடு தீர்வை முன்னெடுக்கவும் வலியுறுத்தும் 'நியூயார்க் அறிக்கை' தீர்மானத்தை இந்தியா ஐ.நா பொதுச் சபையில் ஆதரித்தது. பிரான்ஸ் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் 142... மேலும் பார்க்க

UK: லண்டன் வீதிகளில் திரண்ட மக்கள், போராட்டத்தில் வன்முறை; எலான் மஸ்க் பேசியது என்ன?

தற்போது லண்டன் வீதிகளில் போராட்டம் தொடங்கி இருக்கிறது.என்ன போராட்டம்? நேற்று, 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் லண்டனில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். இந்... மேலும் பார்க்க