செய்திகள் :

பாலஸ்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு - ஐநாவில் நிறைவேறிய தீர்மானம்; அமெரிக்கா அதிருப்தி

post image

பாலஸ்தீன பிரச்னையை அமைதியாக தீர்க்கவும், இரு-நாடு தீர்வை முன்னெடுக்கவும் வலியுறுத்தும் 'நியூயார்க் அறிக்கை' தீர்மானத்தை இந்தியா ஐ.நா பொதுச் சபையில் ஆதரித்தது.

பிரான்ஸ் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் 142 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேறியது.

அமெரிக்கா, இஸ்ரேல், அர்ஜென்டினா, ஹங்கேரி உள்ளிட்ட 10 நாடுகள் இதனை எதிர்த்துள்ளன, மேலும் 12 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்தத் தீர்மானம், ஜூலை மாதம் ஐ.நா. தலைமையகத்தில் பிரான்ஸ்-சவூதி அரேபியா இணைந்து நடத்திய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

PC: Reuters

இந்த அறிக்கை, காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு நியாயமான எதிர்காலத்தை உருவாக்கவும் ஒருமித்த நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது.

இஸ்ரேல் தலைமை, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் இரு-நாடு தீர்வுக்கு உறுதியளிக்க வேண்டும் என்று அறிக்கை கோருகிறது.

மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்தவும், குடியேறிகளின் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் வலியுறுத்துகிறது.

காஸாவில் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்திய இந்தத் தீர்மானம், பிராந்திய அமைதிக்கு இரு-நாடு தீர்வே ஒரே வழி என்பதை உறுதிப்படுத்துகிறது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

``டாஸ்மாக்கில் ரூ.40,000 கோடி ஊழல், மேலிடம் வரை எல்லோருக்கும் தொடர்பு'' - எடப்பாடி குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் பிரசார பயணம் செய்தார். சிங்காநல்லூர் அருகே பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது... மேலும் பார்க்க

UK: லண்டன் வீதிகளில் திரண்ட மக்கள், போராட்டத்தில் வன்முறை; எலான் மஸ்க் பேசியது என்ன?

தற்போது லண்டன் வீதிகளில் போராட்டம் தொடங்கி இருக்கிறது.என்ன போராட்டம்? நேற்று, 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் லண்டனில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். இந்... மேலும் பார்க்க

``நூறு, பீரு, சோறு கொடுத்தால் அவர்கள் பின்னால் ஏன் செல்கிறீர்கள்?'' - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழகம் முழுவதும், "உள்ளம் தேடி, இல்லம் நாடி" என்ற பிரசாரத்தை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசாரத்தை மேற்கொண்டார்.... மேலும் பார்க்க

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தாரா நவாஸ் கனி எம்பி? - சிபிஐ விசாரிக்க வழக்கு

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உய... மேலும் பார்க்க

``ரஷ்யா, சீனாவுக்கு எப்போது அமெரிக்கா வரி விதிக்கும்?'' - ட்ரம்ப் அதிரடி பதிவு

ரஷ்யா - உக்ரைன் போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதற்கேற்றாற்போல், ரஷ்யாவிற்கு கெடுபிடி கொடுக்க, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி ... மேலும் பார்க்க

``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு

கோவை சுகுணாபுரம் – நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிலேயே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை... மேலும் பார்க்க