செய்திகள் :

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை! 22 நக்சல்கள் கைது!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 22 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டத்தின் டெக்மெட்லா கிராமத்திலுள்ள வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் துறையின் கோப்ரா பிரிவினரும், அம்மாநில காவல் துறையினரும் இணைந்து கடந்த ஏப்.15 மேற்கொண்ட சோதனையில் 7 நக்சல்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையின் மற்றொரு குழு மேற்கொண்ட நடவடிக்கையில் பெல்சார் கிராமத்திலுள்ள கோட்டைகளிலிருந்து 6 நக்சல்களும், கண்டாகர்கா கிராமத்திலிருந்து 9 நக்சல்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நக்சல்களிடமிருந்து சாப்பாட்டு டப்பாக்களில் செய்யப்பட்ட குண்டுகள், மாவோயிஸ்ட் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நக்சல்கள் அனைவரும் 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில் தொலைதூரம் ச... மேலும் பார்க்க

ஹேக் செய்யப்பட்ட குஷ்புவின் எக்ஸ் தளப் பக்கம்!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தனது எக்ஸ் கணக்கில் ஹேக்கர்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றியுள்ளதாகவும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் குஷ்பு கூறி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஸ்வாத் மாவட்... மேலும் பார்க்க

முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது கருப்புச் சாயம் பூச்சு!

உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர். காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த முகாலாப் பேரரசின் கட... மேலும் பார்க்க

நேபாளம்: சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயம்!

நேபாளத்தில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்தின் மூலம் நேபாளத்தின் பிரபல சுற்றுலாத் தளமான போகராவிற்கு 25-க்கும் ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் 9 ஒட்டகங்கள் பலி! நெடுஞ்சாலையை முடக்கிய கிராமவாசிகள்!

ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் 9 ஒட்டகங்கள் பலியானதினால் கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலோடியின் போஜஸார் பகுதியில் பரத்மாலா நெடுஞ்சாலையில் நேற்ற... மேலும் பார்க்க