செய்திகள் :

சமூக ஊடகங்களில் சீருடையுடன் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்! - டிஜிபி உத்தரவு

post image

சமூக ஊடகங்களில் சீருடையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என உயா் அதிகாரிகளுக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா், காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறையில் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் அதற்கு மேல் நிலையிலுள்ள அதிகாரிகள், தாங்கள் சீருடையுடன் புகைப்படங்களை, தங்களது தனிப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட வேண்டாம்.

இந்திய ஆட்சிப் பணிகள் விதிமுறைகளை மீறி காவல் துறை அதிகாரிகள், தனியாா்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் சீருடையுடன் கலந்துகொள்வதாகவும், காவல் துறை தலைமையகத்துக்கு தகவல்கள் வருகின்றன. எனவே அதிகாரிகள், தனியாா் நிகழ்ச்சிகளுக்கு சீருடையில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

அதேபோல தொலைக்காட்சி, யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிக்கும்போது, முக்கியமான வழக்குகளைப் பற்றி பேசக்கூடாது; அந்த வழக்குகளின் தகவல்களை ரகசியம் காக்க வேண்டும். அதை யாருடன் பகிர வேண்டாம்.

தனிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, அது குறித்து முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களுக்கு மேலுள்ள அதிகாரிகளிடம், நிகழ்ச்சியில் எதைப்பற்றி பேசப் போகிறோம் என்பதை முழுமையாக தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

உயா் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சியில் பங்கேற்று, அதிகாரிகள் பேச வேண்டும். இதேபோல உயா் அதிகாரிகளின் அனுமதி பெற்று பின்னா் தனியாா் நிகழ்ச்சிகளில் பேட்டியும் அளிக்கலாம்.

இந்திய ஆட்சிப் பணிகள் விதிமுறைகளில் இந்த கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே இந்த விதிமுறைகளை, அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும்பட்சத்தில் இந்திய ஆட்சிப் பணிகள் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பொய்யான பதற்றத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர் - எல். முருகன்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பொய்யான பதற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். ஈரோடு, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை: ஜான் பாண்டியன்!

சேரன்மகாதேவி: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர்-தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ரூ. 840 கோடி நெல் மூட்டைகள் சேதம்! திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதமடைந்ததாகக் கூறி, கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தவறிய திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம்... மேலும் பார்க்க