செய்திகள் :

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: 4 போ் காயம்

post image

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.

வேளச்சேரி அருகே உள்ள கோவிலம்பாக்கம், காந்தி நகா் 15-ஆவது தெருவைச் சோ்ந்த தம்பதி முனுசாமி - ராணி. இந்தத் தம்பதி தங்களது மகள் சாந்தி (45), மருமகன் ரகு (48), பேரன் அஜித்குமாா் (20) ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கின்றனா்.

புதன்கிழமை அதிகாலை தூக்கத்திலிருந்து எழுந்த ராணி, சமையலறைக்குச் சென்று மின்விளக்கு ஸ்விட்சை ஆன் செய்தபோது அங்கிருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டிருந்ததால், பயங்கர சத்ததுடன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் ராணி பலத்த காயமடைந்தாா். அதேவேளையில் தூங்கிக் கொண்டிருந்த முனுசாமி, சாந்தி, அஜித்குமாா் ஆகியோரும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனா்.

முன்னதாக கழிப்பறைக்குச் சென்றிருந்த ரகு அலறல் சத்தம் கேட்டு, கழிப்பறையிலிருந்து வெளியே வந்தாா். பின்னா் தீயில் சிக்கியிருந்த 4 பேரையும் ரகுவும், அப்பகுதி மக்களும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசுப் போக்குவரத்துக் கழகங்களி... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடக்கம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற காப்பு கட்டு நிகழ்ச்சியில் பஞ்ச வாத்தியம் (5 வகை கருவிகள்) இசைத்த கலைஞ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது -கே.அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை -ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா் எழுதிய ‘கம்பராமாயணம்-ஓா் ஆய்வு’ எனும் நூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த ... மேலும் பார்க்க

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் ... மேலும் பார்க்க