செய்திகள் :

சர்வதேச சுற்றுலாவுக்கு ஈடாக செல்போனைக் கேட்கும் கும்பல்! இப்படியும் ஒரு மோசடி

post image

சைபர் குற்றவாளிகள், ஒவ்வொரு நாளும், மக்களை எவ்வாறு ஏமாற்றலாம், அவர்களது மிக சொற்ப சேமிப்பையும் எப்படி திருடலாம் என பலவாறு யோசித்து புதுப்புது உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள்.

இதில், சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழப்பது ஒருபுறமிருந்தாலும், மற்றொருபுறம் சைபர் குற்றவாளிகளுக்கு உதவியதாக அப்பாவி மக்கள் சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது.

முதலில் சொல்வது, சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுவார், இரண்டாவது சொல்வது குற்றவாளிகளாகக் கருதப்படுவர். இரண்டாவது வகைதான் மிகவும் மோசம். அதில், தாங்களும் சைபர் குற்றவாளிகளின் மோசடியில் சிக்கியவர்கள்தான் என காவல்துறையை நம்ப வைக்க வேண்டும்.

எனவே, அதுபோன்ற மோசடிகள் பற்றிய விழிப்புணர்வும் அவசியமாகிறது. அந்த வகையில், சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிநாட்டு சுற்றுலா செல்ல வாய்ப்பு என்று வரும் விளம்பரங்களைப் பார்த்து அந்த லிங்குகளை தொடரும் அல்லது அழைப்புகளை ஏற்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் சொகுசாக தங்கிவிட்டு இரண்டு நாள்கள் வரலாம். அதுவரை உங்கள் செல்போனை எங்களிடம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பது போன்று மோசடியாளர்கள் வலை விரிப்பார்களாம்.

அந்த இரண்டு நாள்களில், அந்த செல்போனை வைத்து நிதி மோசடிகளில் ஈடுபடும் கும்பல், பிறகு, அதனை எதுவும் தெரியாதது போல, உரியவர்களிடம் ஒப்படைத்து விடும் புதிய மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

இவ்வாறு செல்போனை ஒப்படைக்கும் நபர்களுக்கு, தங்களது செல்போனை வைத்து என்ன நடந்தது என்று எப்போது தெரியவரும் என்றால், நிதி மோசடி குறித்த புகாரை விசாரிக்க காவல்துறை அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டும்போதுதான் தெரியவரும் என்கிறார்கள் காவல்துறையினர்.

எனவே, இதுபோன்று செல்போனை அல்லது வங்கிக் கணக்கை யாரேனும் பயன்படுத்திக் கொள்கிறோம், பணம் தருகிறோம், சுற்றுலா வாய்ப்பை ஏற்படுத்துவோம் என அழைப்பு விடுத்தால், அதற்கு ஒப்புக் கொள்ளக் கூடாது என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செல்போனில் எந்த செயலியும் இல்லையே, எவ்வாறு நிதி மோசடி செய்ய முடியும் என்று நினைக்கலாம் சிலர். ஆனா, ஒரு செல்போன் இருந்தால் நிதி மோசடிக்கான அழைப்புகளை மேற்கொண்டு, மோசடியாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தலாம். ஆனால், பணம் இழந்தவருக்குத் தெரிந்தது, எந்த செல்போனில் இருந்து அழைப்பு வந்தது என்பது மட்டுமே. அந்த செல்போன் எண் மீதுதான் புகார் வரும். அந்த செல்போன் எண்ணை வைத்திருப்பவர்களிடம்தான் விசாரணை நடத்தப்படும் என்பதால், மக்களே உஷார்.

About the gang that offers the opportunity to go on international tours and asks for a cell phone in exchange...

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

சேமிப்புத் திட்டங்கள், பங்குச்சந்தை முதலீடு என்று கூறி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கிலான மதிப்பில் நிதி சார்ந்த மோசடிகள் நடக்கின்றன.பணத்தை சேமிக்க வேண்டும், சேமித்து வைத்திருக்கும் பணத்தை பல மடங்காக பெர... மேலும் பார்க்க

இணையம் மூலம் வரன் பார்ப்பவர்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்!

இணையதளம் மூலம், திருமணத்துக்கான வரன் தேடுபவர்களை, சைபர் குற்றவாளிகள் எளிதாகக் குறி வைத்து மோசடி செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.திருமண வரன்களைப் பற்றி ஒரு சமூக மக்களுக்கு என ஒரு முகவர் இருப்பார். அ... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரஸ்ட் மோசடியாளர்களுக்கு உதுவும் ஆதார் எண்! எப்படி?

ஒரு மோசடி பற்றி மக்களிடமிருந்து புகார் வந்ததுமே, இவ்வாறு ஒரு மோசடி நடக்கிறது, மக்களே கவனம் என காவல்துறையினர் உடனடியாக எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் பலரும், நமக்கென்ன என்று இருந்துவிடுவதே, மோசடியாள... மேலும் பார்க்க

புதிதாக வங்கி கிரெடிட்/டெபிட் அட்டைகள் பெறும்போது கவனம்!

ஒருவர், வங்கியில் புதிதாக விண்ணப்பித்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்கும்போதும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன.ஏற்கனவே பயன்படுத்தும் ஏடிஎம் அட்டை காலாவதியாக... மேலும் பார்க்க

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை! ஏடிஎம் பின் மட்டுமல்ல சிவிவி எண் முக்கியம்!!

ஆன்லைன் பணப்பரிவத்தனை மோசடிகளில் இருந்து தப்பிக்க ஏடிஎம் அட்டையின் பின் எண் மட்டும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், அது தவறு. ஏடிஎம் அட்டையின் சிவிவி எண்ணும் முக்கிய... மேலும் பார்க்க

தனிநபரைக் குறிவைக்கும் ஃபிஷிங் தாக்குதல்: எப்படித் தற்காத்துக்கொள்வது?

நவீனத் தொழில்நுட்பம் ஒருபக்கம் வளர்ச்சியடைந்தாலும், மறுபக்கம் அதன் மூலம் மக்களின் சேமிப்புப் பணத்தை சுரண்டுவதற்கான எதிர்வினைகளும் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் சைபர் மோசடியாளர்கள் நாளுக்குநாள் பர... மேலும் பார்க்க